vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Friday, September 11, 2015

ஒரு நகரக் கவிதை

ஒரு நகரக் கவிதை
                   --வைதீஸ்வரன் -


மேம்பாலங்களே இல்லாத கிராமத்தின் அடையாளங்கள்   
இன்னும் மிச்சமிருந்த அந்தக் காலத்து சென்னையில்  வளர்
ந்தவன் நான்.  இன்றைய அசுரத்தனமான  கான்க்ரீட்  கட்டட
ங்கள் எதுவுமே இல்லாமல்  ஊரெல்லாம் சூழ்ந்த கடலுக்கரு
கில் பரந்த வானத்தையும் மினுமினுக்கும் நட்சத்திரங்களை யும் போர்த்திக்கொண்டு தூங்கும் சாதுவான  அந்த  நகரம் 
இப்போது தொலைந்து விட்டது. அந்த இரவுகள் இப்போது  
இல்லாமல் போய்விட்டது.  நாளுக்குநாள் இரவில் மெல்ல  
வளர்ந்துமுழு வட்டமாகிப் பின் தேய்ந்து மறை யும் நிலவின் 
மோன லயத்தை மொட்டைமாடியில் நின்று ரஸித்துக்கொண்
டிருப்பது இப்போது நகரவாசிகளுக்கு மறுக்கப்பட்டபேரின்
பம்.

ஆனால் அப்போது ஊருக்குக்  குறுக்குமறுக்காக  போகும் 
புகை வண்டிகள் தான்  எங்கள்  அன்றாட போக்குவரத்துக்கு 
ஒரு பெரிய  தடங்கல். சிலசமயம் ரயில் தாமதத்தினால் சில 
மணி நேரம்போக்குவரத்து  ஸ்தம்பித்து போவதற்குக்  காரண
மாகவும்  நேர்ந்துவிடும். அந்த வகையில் மேம்பாலங்கள்  ஒரு 
பெரிய  உபகாரம்.

இரண்டு நிமிடங்களுக்கும் குறைவாகக் கடந்து போகக் கூடிய  ரயிலுக்காக  இரு பக்கமும்  மூடிக்கொண்டு நிற்கும் ரயில்வே  கேட்டில் முட்டிக் கொண்டு  வாகனங்களும்  கட்டைவண்டி
ளும் ஜனக் கூட்டமும் பொறுமையற்றுக்  காத்துக் கொண்டி
ருக்கும். ரயில்கேட்  மூடுவதற்குள்  கடந்துபோய்விடவேண்டு
மென்று பல வாகனங்கள்  பரபரப்பாக  அந்த  ரஸ்தாக்களில்  
வேகமாக விரட்டிக் கொண்டு  ஓடுவதையும்  காண முடியும். 

 ரயில்வண்டி நெருங்கிவரும்  சப்தம்  கேட்டவுடனேயே 
கேட்டின் இரண்டுபக்கமும் காத்துக் கொண்டிருக்கும்  மக்கள் 
எல்லையற்ற பரபரப்புடன் திறக்கப்போகும் கேட்டை முட்டி 
மோதிக்கொண்டு தண்டவாளத்தைதாண்டிக்  கடந்துபோகத்  
தயாராக இருப்பார்கள். கேட் திறந்தவுடன் கடந்துபோன ரயி
லின் புகைப்புழுதியும் காற்றின் சுழற்சியும் அடங்குவதற்குள்
ளாகவே ஜனங்களின் கூட்டம் அலைமோதுவதைக்  காணும் 
போது எனக்கு ஒரு கவிதை மனதில் பட்டது. இந்தக் கவிதை 
யின் தொனியும் படிமமும் பான்மையும் எனக்கு எப்போதும்  
Ezra Pound கவிதையை ஞாபகப்படுத்தும். எனக்கு இந்தக் 
கவிதை பிடிக்கும். ஏனென்றால் இதில் மேம்பாலமற்ற சென் னையின் கடந்தகாலஅடையாளமும் தொக்கி நிற்கிறது.

"ரயில்வே கேட்
மாலை யிருட்டில்
விருட்டென வெளியைக் கலக்கி
தொலைந்து போன
மின்சார ரயிலை
குறுக்கு மறுக்காய்ப் பாய்ந்து
கூட்டமாய் தேடுகிறார்கள்
நகரத்து மக்கள் !!


* அப்போது மேம்பாலங்கள் இல்லை    

Saturday, September 5, 2015

யோசிக்கும் போது

யோசிக்கும் போது
 - வைதீஸ்வரன் --
     நீருக்குள் 
    புதை மணலில் சிக்கிய பிணங்கள் போல்
    சில சமயம் மேலுக்கு வருகின்றன
    எண்ணங்கள்

     இன்னும் மலராகாத மகரந்தப் பொடியாய்
     மிதக்கும் மனவெளியில் சில எண்ணத்           
     துகள்கள்.

     இன்னும் கால் விரல் கண் முளைக்காத
     மெழுகு விந்தாய் இருட்டுக்குள்
     அனாதியாய் நீந்துவதும் அதன் வழக்கம்
         
      இன்னும் மொழியாகாத ஒலிச் சிதறலாய்
      ஞாபகக் காட்டுக்குள் வழி தொலைந்து
       அரற்றுவதும் அவை தான்.
              
       பல சமயம்
       எண்ணங்கள் அழையா விருந்தாளி
       பிடிவாதமான பங்காளி..
            
       விட்டு நகர்ந்தால் விழித்துக் கொள்வான்
       என்ற  அச்சத்தில்
       ஓயாமல் நெஞ்சை உதைத்துக்  
       கொண்டிருக்கும்
       பேய்ப் பிள்ளை..

       எண்ணங்கள் காற்றாடியாகும் போது
       மனம் பரவசமாய் பறக்கிறது.

       அதுவே கருநாகம் போல் 
       என்னையும் உன்னையும் வளைத்து 
       சீறும் போது  
       உயிர் கருகிக் கருகி
       எரிந்து கொண்டேயிருக்கிறது
       விடுபடத் தெரியாமல்...


(*கணையாழி  செப்டம்பர்  2015)



Sunday, August 9, 2015

உத்தரவாதம்
                                                                           வைதீஸ்வரன்










அப்பாவின்  அந்திமக் கிரியைகளை   முடித்துவிட்டு  வீடு திரும்பிஆயாசமாக  கூடத்தில்  உட்கார்ந்துகொண்டிருந்
தான் சங்கரன்.

அப்பாவின் நீண்டகால ராணுவ சேவை...பிறகு ஓய்வு, தள்ளாமை நோய்.... மரணம்...ஒவ்வொன்றாக அவன் நினை
வில் ஊர்ந்து போய்க்கொண்டிருந்தது.

அண்ணாந்துபார்த்தான் மேலே பரணில் அப்பாவின் பழைய 
பெட்டிஒன்று கண்ணுக்குப் பட்டது. அதை அவன்  இத்தனை 
வருஷங்களாகத்திறந்து பார்த்ததே  இல்லை. அப்பா வும் ஓய்வு
க்குப் பிறகு அந்தப்பெட்டியைப் பற்றி அக்கறை காட்டவே 
இல்லை.

ஏணிவைத்து ஏறிபெட்டியைக் கீழே இறக்கித் திறந்து பார்த்
தான். ஏற்கனவே  அதன் பழைய பூட்டுஉடைந்துதான் இருந்
தான்.

உள்ளே அப்பா கடைசியாஅணிந்துகொண்டுபோன ராணுவ
உடைஒன்று   பூச்சிமணத்தோடு கசங்கிப்போய் நவுப்பாக மடி
ந்துகிடந்தது. 

அப்பாவை ஒரு  காலத்தில் அந்த உடையில் கம்பீரமாக பார்த்த 
ஞாபகம் சங்க ரனை  சற்று நெகிழச்செய்தது.

உடையை நன்றாகவெயிலில் உலர்த்தி உதறி  புழுதிகளை நீக்கி  
சீராக்கினான். அதைப் பார்க்கும்போது அப்பாவின்  கடந்த கால 
ஸ்பரிஸமும் வாசனையும்  நினைவில் சுழன்று  மனதை ஈரப்படு
த்தியது. அப்பாவின் ராணுவஉடையைத் தானும் அணிந்து
கொண்டு பார்க்க வேண்டுமென்று அவனுக்கு ஒருஆவல்.

அவர் இவனைவிட பருமனாக இருப்பார். போட்டுக்கொண்ட
போதுஉடை  பெரியதாக தொளதொளவென்று இருந்தது.
கண்ணாடியில்  பார்த்துக்கொண்டு சற்று நேரம் நின்றான்.  
சிரிப்பு வந்தது.இரண்டுபக்கமும் நீண்ட  ஆழமான பாக்கெட்
டுகள்இருந்தன.... கையை  விட்டுப் பார்த்தான்.

இதென்ன?"வலது பாக்கெட்டில் ஏதோ ஒரு காகிதம் 
தட்டுப்பட்டது. பிரித்துப் பார்த்தான்.

ரங்கராஜூ  ஷூ கடை
ரிப்பேருக்கு  ஒரு  ஜதை  ஷோ
மிலிட்டரி கோபால்
தேதி  8-9- 90”  கூலி  ரூ25/

இதென்னஅப்பா இருபத்திஐந்து வருஷங்களுக்கு முன் ரிப்
பேருக்காக இந்தக்கடையில் கொடுத்தகாலணியை வாங்கவே       மறந்துபோயிருக்கிறார். கடைசியாக   சில வருஷங்களில் 
அவருக்குமெள்ள மெள்ள ஞாபக மறதி அதிகமாகிக்கொண்
டிருந்தது.

ஓய்வுக்குப்பின் உபயோகமற்றுப்போன காலணியைப் பற்றி  
நினைக்கவேஅவருக்கு விருப்பமில்லாமல் போய்விட்டதோ!!

25  வருஷங்கள்....இப்போது அந்தக் கடை இருக்கிறதாஅந்த 
சொந்தக்காரன்   இன்னும் இருப்பானா?அவனுக்கு ஞாபகமி
ருக்குமாஅந்தத்தெருவே இப்போது அதே மாதிரி இருக்குமா?

விலாஸத்தைப் பார்த்தான் :

ரங்கராஜூ  ஷூ  கடை
நம்பர்  14  ராகவ ரெட்டி  தெரு...

நல்லவேளைவிலாஸம் தெரிந்ததாகத்தான் இருந்தது

ஆனால் தெரு பெயர் தான் இப் போது ராகவாத் தெரு 
என்றுமாறிப் போயிருந்தது.

ஆவலை அடக்கிக்கொண்டுமறுநாள் காலைவரை காத்திருந்து  
சங்கரன் ரங்கராஜு ஷூ கடையைத்தேடிக்கொண்டு போனான்.

இப்போது நிச்சயமாக ராகவாத் தெரு பழைய ராகவ ரெட்டி
தெருவைப் போல்  இருக்காது. ஏகப்பட்ட கடைகள் .இடித்துக் 
கட்டப்பட்ட அடுக்ககங்கள்... வாகனக்  கூச்சல்கள்...

இருந்தாலும் ஏன்அந்தப் பழைய ஷூ கடைஅங்கே இன்னும் 
இருக்கக்கூடாது?

இரண்டுமூன்று
 முறை மேலும் கீழுமாக நடந்துநம்பர் 14 கண்
ணில் படுமா என்று   பார்த்துக்கொண்டு போனான். 

நம்பர்கூட மாறி இருக்கலாம். பெயர் பலகை இருக்கலாமே!!

சட்டென்று  ஒரு இடத்தில் நின்றான். அங்கே வலதுபக்கம் 
ஒரு சைக்கிள் கடை யின் தகரக் கூரைக்குப் பின் தெரிந்த மேல்
மாடி யில் அநேகமாக  பிளந்து கொண்ட ஒரு அறைக்கதவில் 
அந்தப்பலகை கோணலாகத் தொங்கிக் கொண் டிருந்தது !!

ரங்கராஜூ  ஷூ கடை!!

சங்கரனுக்கு வியப்புத் தாங்கவில்லை. சைக்கிள்கடையின் 
பக்கவாட்டில் மெல்ல  றிப்போய் மேலே கடைக்குள் எட்
டிப்பார்த்தான்

சிறிய நீள வாட்டமான அறை. சுவர் ஓரங்களில்பொருந்தி
யிருந்தநீளமான பலகைகளில்  பலவிதமானகாலணிகள்
அலங்கோலமாகநிரம்பிக்கிடந்தன.  அதிக வெளிச்சமில்லை. 
பழைய தோல் வாசனை குப்பென்று நெடியடித்தது.

யாரு  ஸார்?”   

வயதான கிழவன் ஒருவன் கண்ணாடியை மூக்கில் பொருத்
திக் கொண்டு இருண்டபின்கட்டிலிருந்துமெள்ள வெளியே 
வந்தான். அங்கேதான் அவன்  குடித்தனமும்  இருக்க வேண்டும் என்று தோன் றியது.

 சங்கரன்  தயக்கத்துடன்  ஆரம்பித்தான்.

நல்லவேளை  ஒங்ககடையை  கண்டு பிடிச்சுட்டேன்...ரொம்ப 
வரு ஷமா இந்த  கடை  இருக்குதோ?" ஒரு  பேச்சுக்காக சொன்
னான்.

 கிழவனுக்கு  அது ரஸிக்கவில்லை.

தம்பீ...இப்போ  என்னா  வோணும்  உங்களுக்கு?  ஒங்க  
செருப்புநல்லாத்  தானே  தெரியுது!..

இல்லேஅதுக்காக வரலே!.. இது இப்போ இருக்குமோ
இருக்  காதோ...தெரியலேய்யா.. இந்த சீட்டைப் பாருங்க..
எங்கஅப்பா  மிலிட்டரிக்காரர்...இருபத்தி அஞ்சு வருஷத்து
க்குமுன்னாடி இங்கே  ஷூ  ரிப்பேருக்கு  கொடுத்தார்திருப்பி 
வாங்கமறந்துபோய்ட்டாருன்னு நெனைக்கிறேன்.இந்தச் சீட்
டைப்பாருங்க!  அநேகமா  இருக்காது.  சும்மா ஒரு  ஆர்வத்துக்
காகத்தான்  அப்பா ஞாபகமா....வந்தேன்".

சங்கரன் அந்த ரஸீதை கிழவனிடம் கொடுத்தான்.

கிழவன்  தடிமனான கண்ணாடியை சரி செய்து  கொண்டு 
சற்று நேரம் ன்னிப்பாக ரசீதைப் பார்த்துக்கொண்டே
நெற்றியை  தேய்த்துக்கொண்டான்...கொஞ்சம் இருமி
னான்.

 “இருங்க..பாக்கறேன்..”   .

மெதுவாகஅண்ணாந்து சுவரோரம் இருட்டு மூலையில் 
சாய்ந்து நின்றுகொண்டிருந்த ஒரு பரணின்  மேல்   தட்டில்சுமத்திவைக்கப்பட்டிருந்த பழைய செருப்புக் கூட்ட
ங்களுக்குள் ஒரு கம்பை நீட்டி ஆட்டினான். நாலைந்து செருப்பு கள் தபதபவென்று தரையில் விழுந்தன. 

கிழவன் அவற்றையெல்லாம் எடுத்து உன்னிப்பாகப் பார்த்து
விட்டுக்  கீழே  போட்டான். மீண்டும் பரணின் இன்னொரு 
மூலையிலிருந்து செருப்புகளை   உதிர்த்தான்.
  
சங்கரனுக்கு  பெரிய  எதிர்பார்ப்பில்லை.

"முடியலேன்னா  விட்டுடுங்க..” ......

கிழவன் கழுத்தைத்திருப்பி சங்கரனைகூர்மையாகப் பார்த்து
விட்டுஒங்க  அப்பா ஞாபகார்த்தமா கேக்கறீங்க.இருங்க,
பொறுமையா  பாத்து        தரேன்...மறுபடியும்  கும்பலில் 
தேடஆரம்பித்தான்.... 

கையில் ஏதோஒரு  ஜதையைஎடுத்து சோதித்துப்  பார்த்து 
விட்டு மறுபடியும் ஏதோ நினைவுக்கு  வந்த  மாதிரி மேலே  
பார்த்தான்...

  “இருக்குங்க...

  “என்னது?..இருக்கா?..” சங்கரனால்  நம்பமுடியவில்லை!

 “அதோ பாருங்க அந்த  மேல் தட்டு மூலையில….அந்தக்  
கருப்புஜோட்டுக்   குப் பின்னாலெ நாடா இல்லாமெ ரெண்டு  
ஷூ  தெரி யுதா.தல தடிமனான    முரட்டு   ஷூ.....

  சங்கரனால் இன்னும்   நம்ப முடியவில்லை.

 ஆமாம் தெரியுதே!..

 “அது தான்  ஒங்க  அப்பாவோட  ஷூ...

சங்கரனுக்கு  நம்ப முடியாமல்  ஆச்சரியமாக இருந்தது..
அந்தக்  கிழவனை   பெருமிதத்துடன் பார்த்தான். 'இந்த  
வயதில் இவருக்குஎவ்வளவு ஞாபகம்! எவ்வளவு நாணயம்! 
எவ்வளவுசிரத்தை...! அடடா!........'

ரொம்ப  நன்றிங்க....எப்படி  இருபத்தி ஐஞ்சு வருஷமா 
இவ்வளவு பத்திரமா  இதை  வைச்சிருக்கீங்க...ஆச்சரியமா 
இருக்குங்க...! அப்பா இருந்தா  இப்போ எவ்வளவு சந்தோ ஷப்படுவாரு..

அதெல்லாம் ஒரு தொழில் விசுவாசம்தான் தம்பி... இங்கே  
ரிப்பேருக்குக்  கொடுத்தா எதுவும்  இங்கெயே தான்  இருக்
கும்..போகாது.!!..

அவன் ஷூவை காகிதத்தில் பொதிந்து கட்டிக்கொடுப்பான் என்று சங்கரன் காத்துக்கொண்டிருந்தான்.

சங்கரன் நிற்பதைப் பார்த்து கிழவன் உத்தரவாதத்துடன் சொன்
னான்.

தம்பீ....பிரச்னையில்லே!..அடுத்தசெவ்வாக்கிழமை இதே 
டயத்து க்கு வாங்க .......... ரெடியாயிடும் !!!!!!!

சங்கரனுக்கு கீழே இறங்கப் படி தேவை இருக்கவில்லை!