Thursday, December 20, 2012

கவிதை



வேற்றூரில் ஒரு காலை
               
                                       வைதீஸ்வரன்


      அசையாமல் அசைந்து 
      காற்றை மெல்லக் காட்டிக் கொடுக்கின்றன..
     
மேகங்கள்.
      பறவைகள் பூத்த மரங்களின் கன்னம் சிவந்து
     
கனிகள் பாடுகின்றன காலைஇசையை..
      துவளும் பூமியை மெள்ளத் தடவும் கிரணவிரல்கள்
     
கிளுகிளுக்கின்றன  பசுமை சிலுசிலுத்து
      வழக்கத்திற்கு அடிமையற்ற வானம்
     
உன்னத ஒவியங்களை ஓயாமல்
     
எழுதிக் கலைத்துக் கொண்டே  சிரிக்கின்றன
      வாழ்வுக்கும் சாவுக்கும் வித்தியாசமழிந்த புள்ளியில்
     
மௌனத்தில்  சயனித்திருக்கிறது உள்மனம்..
      தற்காலிக மரணத்தின்
     
அழகான சமாதி வரிசைகளாக     
     
சாலையின் இருமருங்கிலும்
     
உறங்கும்  வீடுகள்
     
உயிர்களை தாலாட்டியவாறு....

 
 0

No comments:

Post a Comment