Saturday, May 4, 2013

poem by vaidheeswaran



வயதின் விரிசல்
------------------------------------------   வைதீஸ்வரன்














நினைவுகள்
கைநழுவும்  மீன்கள்
காலத்தோடு  பதுங்கிக் கொள்ளும்
கைக்கெட்டாப் பச்சோந்தி....
முகங்களின் பெயர்களை எப்படி மாற்றுகின்றன?...
சில சமயம் இறந்த வருஷங்களை
இடம் மாற்றி நிறுத்துகின்றன..
வேளை எனக்கு வெவ்வேறு  வரிசையில்
விடிகிறது..
பலமுறை
 நேற்று நடந்ததை இன்றாகவும்
இன்று பார்ப்பதை இனிமேல் தான்
பார்க்கப்  போவதாகவும்  ஏமாறிக் குழம்புகிறது
மனம்.
வந்த போது தெரிந்த நீங்கள்
விடைபெறும்போது வேறொருவராகிப்
போகிறீர்கள்......ஏன்  அப்படி?
 நினைவு மூட்டைகள்  சிதறித் தெறித்து
விட்டன.......  பாரமற்ற  தலை..
ஆசிரியரற்ற   ஆரம்பப் பள்ளிக் கூடம்...
இப்போது ஆகாசம்  எனக்கு உள்ளும் புறமும்
ஏதோ முடிவில் இறங்கி
இப்போது  குடையும் கையுமாக
கால் வீசி நடை பயில்கிறேன்...
குழந்தைகள் எப்போது  மீனானார்கள்?
 குளத்தின்  ஆழமா இது ?
அல்லது   இப்படி ஒரு  செவ்வானமா?

[*''கணையாழி  மே 13]




No comments:

Post a Comment