vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Monday, November 13, 2017

கண்ணில் தெரிந்த வானம் ----- வைதீஸ்வரன்

கண்ணில்  தெரிந்த  வானம்
---------------------------------------------------
வைதீஸ்வரன்


  காற்றுக்  கலைக்காத  கோலமடீ -  இருள்

காட்டில்  விளைந்த  பூக்கூட்டமடீ!!

நேற்றும்  இனியென்றும்   தோணுமடீ – திசை

தேடும் கப்பல்துணைக்   காகுமடீ!.

வானம்  தினம்கட்டும்  சேலையடீ – அதில்

வாலிபர்  கண்பட்ட  ஊனமடீ!

ஆடும் பிறை தூங்கும்  சோலையடீ! –  நம்மை

ஆக்கிப் படைப்பவன்  சூளையடீ!

பாயத்  தெரியாத  மீன்களடீ -  வானப்

பாயில் விரித்த  பொற்க் கூளமடீ!

கூடிச் சிரித்திடும்  சேய்களடீ! – தெய்வம்

சூதில்  உருட்டிய  காய்களடீ!

மோனம்  நிறைந்தபல்  வேதமடீ! – இன்ப

மோகக் கனல் வீசும்  நீலமடீ!
ஆழத்து நெஞ்சுக்குள்  மோதுகின்ற -  எந்தன்

ஆசைக் கனவுகள்  சாட்சியடீ!



 *
*இந்தக்   கவிதையை  அல்லது  பாடலை  55 களில்  எழுதிய  ஞாபகம்பாரதியாரின்  பல  கவிதைகள்  இப்படிப்பட்ட  பாடல் வடிவத்தில்  இருக்கி ன்றனஅடிக்கடி  அதை  ஆர்வத்துடன்  வாசிக்கும் போது அதே  தொனியில்  எழுத   ஒருவர்  தூண்டப்படக்  கூடும்.  

ஆனால் வரிகள்  வெற்று  அலங்காரமாக  சோடையாக  இல்லாமல்  இருப்பது  முக்கியம். எதுகை  மோனைக்காக  வலிந்து  செயற்கையாக  சொருகப்பட்ட வார்த்தையாக  அமைந்து  விடக் கூடாது.

நவீன  கவிதைக்  கோட்பாடுகளின்படி  இது  கவிதை ஆகாதுபாரதி யாரின்  கவிதைகளையும்   அப்படித்தான்சொல்லுவார்கள்.

ஆனால்  இங்கே  ஒரு  இயற்கையின்  புதிரும்  பிரும்மாண்டமும்  அளப்பரிய  சௌந்தர்யமும்   பாந்தவ்யமும்  ஒரு  மனதை  கவித்துவ மான  மொழிகளில்  சித்தரித்துப் பார்க்க  ஆசைப்படுகிறதுவானத்தின்  அழகை  மனித மொழிகளால்  அள்ளிப் பருக  முயல்கிறது

இதைக்  கவிதை  என்று சிலர்  சொல்லாவிட்டாலும் பரவாயில்லைஇந்த  சித்திர மொழிகள்  எனக்கு ஒரு  இசையின் மொழி வடிவமாக  உவப்பாகவே  இருக்கிறது .

 இதைப்  பள்ளிகளில்  சிறுமிகள்  பாடிக் கோலாட்டமாடினால்  சந்தோஷ மாக  இருக்காதா!!

                  


    வைதீஸ்வரன்              


Friday, November 10, 2017

வைதீஸ்வரன் கவிதைகள் முழுத் தொகுப்பு மனக்குருவி - இந்திராபார்த்தசாரதி

வைதீஸ்வரன்  கவிதைகள்  முழுத் தொகுப்பு

மனக்குருவி

இந்திரா பார்த்தசாரதி
                                            











ஒரு வித மானசீகப் பிடிவா தத்தின் வெளிப்பாடுகளாக 366 மலர்கள் பூத்திருக்கின்றனமலர்களின் பெயர் வைதீஸ்வரன் கவிதைகள்’. 

கிணற்றில் விழுந்த நிலாவாகத் தொடங்கி இறுதியில்மொழியற்ற கணமாகஇந்தப்பிடிவாதம்பரிணாமம் அடைந்திருக்கிறது.

கவிஞரின் முதல் கவிதையிலிருந்து அவர் எழுதியுள்ள அண்மைக் காலத்துக் கவிதை வரைத் தொடர்ந்து படிக்கும்போது, அந்தந்தக் காலத்துச் சம்பவங்களின் தாக்கம் வேறுபட்டாலும், குரல் ஒலி மாறவில்லை என்பதை நம்மால் உணரமுடிகின்றது. இதுதான் கவிதையின்உள்ளீடான ரிதம்’.










வியட்நாம் போரின் போது, ஒரு பிரபலத் தமிழ் எழுத்தாளரை ஒருவர் கேட்டாராம்உங்களை ஓர் அமெரிக்கன் சிப்பாய் கண்மூடித்தனமாக மைலாய் வீதியில் வெறிபிடித்தாற்போல் குழந்தைகளையும், பெண்களையும் சுட்டுக் கொண்டே ஓடியது பாதிக்கவில்லையா? நீங்கள் அதைப் பற்றி ஏன் எழுதக் கூடாது?’ என்று கேட்டாராம். எழுத்தாளருக்குக் கோபம் வந்து விட்டது. ‘நான் எதைப் பற்றி எழுத வேண்டும், எழுதக் கூடாது என்று சொல்வதற்கு நீ யார்?’என்றாராம்.

எழுத்தாளர் கூறிய பதிலை என்னாள் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ’மைலாய் வீதிச்சம்பவம் ஒரு குறியீடு. அந்தப் போர்வீரன் மீதும் தவறில்லை. போர் எப்படி ஒரு மனிதனை மிருகமாக்குகிறது என்பதின் குறியீட்டு உருவகந்தான் அந்தச் சம்பவம்.

இந்தத் தொகுதியில் வைதீஸ்வரன் அதை ஒரு குறியீட்டு உருவக மாகத்தான் கையாளுகிறார்.

கற்கால இருட்டுக்குள்
கண் புதைத்து
இருதயத்தைப் பிடித்துக் கொள்
உயிர் வாழப் பழகிக் கொள்
இருபதாம் நூற்றாண்டு

கற்காலத்தில் மனிதனை நோக்கியிருந்த ஒரே பிரச்னை கொடிய விலங்குகளினின்றும், இரக்கமற்ற இயற்கையினடமிருந்தும் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதுதான். இன்று மனிதனே கொடிய விலங்காக மாறி விட்டான்! ஓர் அணுகுண்டு வீசி லட்சம் பேரைக் கொல்கின்றான்! மனிதன் தன்னைச் சக மனிதனிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டும்! கவிஞரின் நயமான குரலில் எவ்வளவு கூர்மை!‘சொல்லொக்கும் சுடுசரம் ‘ !
கடலில் ஒரு துளியாகமைலாய் வீதிஎன்ற கவிதையைச் சுட்டிக் காட்டினேன். தொகுப்பு முழுவதும் வைரமென மின்னும் கவிதை ஒளி மின்னல் கீற்றுக்கள்1

அநாமிகா பிரசுராலாயத்தின் அதிபர் லதா ராமகிருஷ்ணனைப் பாராட்ட வேண்டும். அற்புதமான வடிவமைப்பு. கவிஞரே வரைந்த நுண்ணிய சித்திரம் முகப்போவியமாக அமைந்திருக்கிறது..’கவிதை நுண்கலைக ளின் அரசி என்றால் ஓவியம் இளவரசிஎன்பார் ஆடன். அரசி, இளவரசி ஆகிய இருவர்மீதும் ஆளுமை கொண்டிருக்கும் வைதீஸ்வரனுக்கு என் பாராட்டுக்கள்!