vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com
Showing posts with label ஒரு புகைப் படத்தின் கதை வைதீஸ்வரன். Show all posts
Showing posts with label ஒரு புகைப் படத்தின் கதை வைதீஸ்வரன். Show all posts

Sunday, July 24, 2016

ஒரு புகைப் படத்தின் கதை

ஒரு புகைப்படத்தின் கதை
 

வைதீஸ்வரன்


இந்த  புகைப் படம்  எடுத்த போது  எனக்கு  ஐந்து வயது 
இருக்கலாம். சேலத்தில்  என்  அப்பாவின்  நண்பர்ஒருவர் 
திடீரென்று  ஒருபோட்டோ ஸ்டுடியோவை ஆரம்பித்து
விட்டார்.

அப்போது அந்தத் தொழில் மிக  வித்யாசமானது.  நூதன மானது.  ஆனால்  அவர்  தொழிலில்  மிக ஊக்கமானவர். 
தன்  நண்பர்களையெல்லாம்  அழைத்து வந்து  போட்டோ எடுத்துக்கொள்ளும்  ஆர்வத்தைத்  
தூண்டிவிட்டார்.

 அநேகமாக  நான்  பிறந்த பிறகு  எடுத்துக்கொண்ட 
முதல் போ ட்டோ  இதுவாகத் தான் இருக்கும்.  அதற்கு முந்தைய  வருஷங்களில்  போட்டோ  எடுப்பதை என் 
பாட்டி  பிடிவாதமாகத்  தடுத்துநிறுத்திவிட்டாள். 
போட்டோ எடுத்தால்  ஆயுசு குறைந்து  விடும்என்பது  அவளுடைய  அபிப்ராயம்.

இப்போதெல்லாம் வயிற்றுக்குள்ளிருந்தே குழந்தையை போட்டோ எடுக்க  ஆரம்பித்து  விடுகிறார்கள் !! 

இந்த போட்டோவில் என்கூட  நிற்கும் அக்கா  எனக்கு 
இர ண்டு வயது மூத்தவள்.  சாயங்காலங்களில்  திண்ணை
யில்  கல்லாட்டமும் பாண்டியும்  மற்ற  சிறுமிகளோடு 
விளையாடிக் கொண்டிருப்பதைத் தடுத்து  என் அம்மா  அவளை  இப்படி  இழுத்து வந்து  விசேஷமாக  அலங் 
கரித்து  போட்டோவுக்குத்  தயார் செய்ததில்  அவளுக்கு ரொம்பக் கோபமும்  அழுகையும்  வந்திருக்கவேண்டும்.

 “போட்டோவில்  சிரிக்காமல் இருந்தாலும் பரவா
யில்லை  அழுகாம  இரு..”  என்று என் அப்பா  அதட்டி 
இருக்க வேண்டும். 

தவிர  எங்களுக்கு எதிரே பளீரென்று விளக்குப் போட்டு  கருப்புத் துணிக்குள்  தலையை  நுழைத்துக் கொண்டு 
நிற்கும்  அந்த காமிரா  மாமாவைப் பார்க்கும் போது  
ஏதோ மந்திரவாதியைப் பார்ப்பது  போல்  இருந் திருக்க
லாம்.

 எனக்கு  அந்த  மூன்று சக்கர  சைக்கிள்   மிகவும் 
பிடிக்கும். அப்போது  அப்பா  சேலத்தில்  சைக்கிள்  
கடை  வைத்திருந்தார்.  அவர் கடைக்கு  இந்த  சைக்கிள்  
பழுதுபார்ப்பதற்கு  வந்திருந்தது.  அதை நான்  சில 
நாட்கள் ஓட்டிக் கொண்டிருந்தேன்.

 சைக்கிளை  ஓட்டவிடாமல்  அந்த  காமிரா  முன்னால் 
அசையாமல்  உட்காரச் சொன்னது   எனக்கு பிடிக்க வில்லை. அப்பாவின் கண்டிப்புக்காக  அசையாமல் உட்கார்ந்திருக்கிறேன்.

இந்தப் புகைப்படம்  சுமார்  75 ஆண்டுகளுக்கு  முன் எடுத்தாலும்  அதை எடுத்தவரின்  தொழில் நேர்த்தியை 
நிச்சயம் பாராட்ட வேண்டும்  .அப்போதைய  காமிராவில் 
மிகக் குறைவான  நுணுக்கங்களே இருந்தன.. இதை இயக்குவதற்கு  தீவிரமான  மனப் பயிற்சி வேண்டும்  

லென்ஸை  சரியான நேர அளவுக்கு  சில வினாடிகளுக்கு கையால் திறந்து மூட வேண்டும்   இந்தக்  கைத்திறமை 
ஒரு தியான நிலைக்கு  சமமானது.

எண்பது  வருஷங்களுக்கு  பிறகு  நம்மையே   நாம் 
திரும்பிப் பார்த்துக்  கொள்ளும்போது  நமது  வாழ்வின் ஆச்சரியமான  பரிணாமமும்  புதிரும்  வளர்ச்சியின் 
அரூபமான  ஒழுங்கும்   தீராத  நெகிழ்ச்சியைக் 
கொடுக் கின்றன.  ஏதோ  ஒரு  மகாசக்தியின்  விசால
மான கருணையை நினைக்கத்  தூண்டுகிறது