vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Tuesday, May 15, 2012

அர்த்தமற்ற வார்த்தை _வைதீஸ்வரன்


அர்த்தமற்ற வார்த்தை


                      _வைதீஸ்வரன்





















     
     
சிறைச்சாலையில் அவன் அடைக்கப்பட்டிருந்த அறையின் காரணமாக அவன் தட்டுத்தடுமாறி எழுந்து அருகில் போய் நிற்பதற்கே சற்று நேரம் பிடித்தது.

 வார்டன் சிரித்துக்கொண்டே சொன்னார்.

 "இன்னும் பத்து நாட்களில் உனக்கு விடுதலை கிடைக்கப் போகிறது. உன்னுடைய நன்னடத்தையை கவனித்து உன் ஆயுட்கால தண்டனையைக் குறைத்து  உன்னை விடுதலை   செய்ய  மேலிடத்திலிருந்து உத்தரவு வந்தி ருக்கிறது.  இந்த  நல்ல செய்தியை சொல்லி விட்டுப் போகத்தான்  வந்தேன்"   என்றார்.

வார்டன் அங்கிருந்து போய் பல நிமிஷங்கள் ஆகியும் அவன் கம்பியைப் பிடித்துக்கொண்டேநின்றான். அவன்  முகத்தில் சந்தோஷமோ   நிம்மதியோ   எதுவும்  பிரதிபலிக்கவில்லை வார்டன்  சொன்ன தகவல் அவனை பெரிதாக பாதித்ததாகத் தெரியவில்லை.

 "விடுதலைன்னா என்னா? " 

அவனுக்கு அதன் அர்த்தம் முற்றிலும் மறந்துபோய் பல வருஷங்கள் ஆகியி ருந்தது. அவன் பார்வையில் துக்கமும் பேதலிப்பும்தான் கூடியிருந்தன.   அந்தச்  செய்தி   அவன் நிம்ம தியை வெகுவாக குலைத்துவிட்டுப் போயிருந் தது.

அவன் முகத்தைக் கழுவிக்கொண்டு வழக்கம்போல் தன்  அன்றாட   வேலை களைச்   செய்வதற்குப் புறப்பட்டான்.

அவன் கடந்துபோன வழியெல்லாம் எதிர்ப்பட்ட கைதிகள் அவனுக்கு   'வணக்கம் '   சொல்லி  மரியாதையை தெரிவித்தார்கள்.

அப்போது எதிரே ஒரு சிறை அதிகாரி  இவனை நோக்கி வந்துகொண்டிருந் தார்.  "முருகையா!  நல்லா இருக்கீங் களா? இன்னிக்கி மேக்குப் பக்கமா    மரம் நட்டு ஒரு வேலி  கட்டணும். ஒரு பத்துப் பேரை உங்க வார்டுலேருந்து அனுப்பிவைக்கறீங்களா? "

முருகையன் பதிலுக்கு தலையசைத்தான். அவர்கேள்வியை அவன் பொருட் படுத்தியதாக தெரியவில்லை.

அவன் நேரே சாப்பாட்டுக்கூடத்துக்குப் போனான்.அங்கே கைதிகள் வரி சையாக கையில் தட்டுடன் சிற்றுண்டியை வாங்க நின்றுகொண்டிருந்தார் கள். இவன் போனவுடன் தோழமையுடன் வரவேற்று முதலில் நிற்கச் சொன்னார்கள் அவன் அவர்கள்அழைப்பை  நிராகரித்துவிட்டு வரிசையின்  கடைசியில் போய்நின்றான். கைதிகள்  அவனை  வினோத மாகப் பார்த்துக் கொண்டு  நகர்ந்தார்கள். இந்தப் பத்துவருஷங்களில்  அவன் இப்படி நடந்து கொண்டது இது தான்   முதல்   தடவையாக இருக்கும்.

சாப்பிட்டு முடிந்தவுடன்  முருகையன் தட்டைத் தூக்கிக் கொண்டு சமையற் காரரிடம் போய் கத்தினான்; ' ஏய்யா நீங்க ஒழுங்கா சமைக்க மாட்டீங் களா?"- தட்டைப் போட்டு உடைத்துவிட்டு  வெளியேறினான்.

கைதிகள்  திடுக்கிட்டு நின்று அவன்   நடத்தையை   புரிந்து கொள்ள முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அதற்கு மறுநாள் முருகையன் சிறைச்சாலையின் வாசக சாலைக்குச் சென்று அங்குள்ள புத்தகங்களை கிழித்துக் கொண்டிருப்பதாக புகார் வந்தது.

இன்னொரு நாள் அவன் சககைதிகளிடம் ஏதோ வாக்கு வாதம்  செய்து கைகலப்பில்  ஈடுபட்டு  யாரையோ அடித்துவிட்டதாகவும்  சிறை  அதிகாரி ஒருவர் சொன்னதாகவும் ஒருவர்  அவனை பலாத்காரமாக இழுத்துக் கொண்டு போனதாகவும் சொல்லப்பட்டது.

ஒரு நாள் காலை  வார்டன் வந்து அவன் சிறைக்கம்பி களைத் தட்டி எழுப்பினார்.

"முருகய்யா...உடனே எழுந்து எங்கூட வரீங்களா?..  சீக்கிரம் வாங்க”  - அவர்  குரல் சற்றுக் கடுமையாக இருந் தது.

முருகைய்யன் அவர் பின்னால் மெள்ள நகர்ந்து போனான். அவன் ஒவ்வொரு தப்படியும் அவனை பின்னுக்கு தள்ளியதுபோல் தடைப் படுத் திக்கொண்டிருந்தது. வார்டன் அவனை மூத்த மேலதிகாரியின் அறைக்குக் கூட்டிச் சென் றான்.  

அங்கே நான்கு அதிகாரிகள் வட்டமாக உட்கார்ந்து கொண்டி ருந்தார்கள்.

முருகையன் அவர்களுக்கு முன் கைகட்டி நிற்காமல் பரிச்சயமற்ற பார்வை யுடன் நின்றுகொண்டிருந்தான்.

அதிகாரிகள் சற்றுநேரம் அவனை கவனித்தவாறு  இருந்தார்கள். ஒரு அதிகாரி  லேசாக கனைத்துக்கொண்டு பேச ஆரம்பித்தார்.

"முருகய்யா..  உங்களுக்கு உடம்பு சரியில்லையா?..."

அவன்  பேசாமல் இல்லையென்று தலையாட்டினான்.

இன்னொருஅதிகாரி பேசினார்." ரெண்டு மூணு நாளா உங்க நடவடிக்கை   ரொம்ப  மோசமா  இருக்கறதாக  ரிப்போர்ட் வந்திருக்கு. இதுக்கு என்ன காரணம் சொல்ல முடியுமா?“

முருகையன் பதில் பேசவில்லை.

மற்றொரு அதிகாரி சொன்னார்.

"இதுக்கு திருப்தியான காரணங்களை சொன்னா  நாங்க அதை ஒத்துக்கிட்டு உங்களை மன்னிச்சுடுவோம்... இந்த சமயத்துலெ நீங்க அப்படி புத்திசாலித் தனமா    நடந்துக்கறது   ரொம்ப நல்லது."

முருகய்யன்  பதிலே பேசவில்லை.

அவனுடைய அலட்சியப்போக்கு அதிகாரிகளை சற்று பொறுமையிழக்க வைத்தது.  ஒரு மூத்த அதிகாரி சற்று ஆத்திரத்துடன் பேசினார். 

"முருகைய்யன்,  இப்படி பேசாம இருந்தா விளைவு உங்க ளுக்கு  ரொம்ப பாதகமா ஆயிடும். நீங்க இங்கே  வந்து சுமார்   23  வருஷம்  இருக்குமா ?" 

 முருகய்யன் தலையாட்டவில்லை.

"ஒங்க நன்னடத்தையும் பொறுப்பான நடவடிக்கையும் நாங்க கவனிச் சிக்கிட்டுத்தான் வர்ரோம். இன்னும் பத்து நாள்லெ உங்களுக்கு விடு தலை கிடைக்கப்போவுது. இந்த   சமயத்துலே நீங்க இப்படிப் பைத்தியக்காரத் தனமா நடந்துக்கறது நல்லாருக்காசொல்லுங்க..சொல்லுங்க”. 

முருகய்யன் இன்னும் பதில் பேச முடியாமல் நின்று கொண்டிருந்தான். ஆனால் அவன் உடம்பும் கைகளும் பதறிக் கொண்டிருந்தன.

"இப்போ ஏதாவது சொல்லப் போறீங்களா இல்லையா  நீங்க இப்பொ விடுதலை ஆகப்போறது உங்க பதிலைப் பொறுத்துத்தான் இருக்கு! பேச முடியுமா முடியாதா? "

அதிகாரி சற்று குரல் உயர்த்தி கத்தினார்.

முருகைய்யனின் வாய்  பதறியது. கண்கள் குப்பென்று தாரை தாரையாகக் கொட்டியது.

அய்யா...எனக்கு விடுதலை வேண்டாம்….எனக்கு விடு தலை வேண்டாம். என்னை இங்கெயே சாகவிட்டுடுங்க  இந்த விடுதலையை வெச்சிகிட்டு நான் இனிமே என்ன செய்யப்போறேன்.. நான் விட்டுட்டு வந்த உலகமும் வாழ்வும் எனக்குள்ளே செத்துப்போயி எவ்வளவோ வருஷம் ஆயிருச்சி.... எனக்குள்ளே எப்பவோ காஞ்சி கட்டி தட்டி வடுவாக மாறிப்போன ஞாபகத்தை மறுபடியும் கிளறிவிட்டுத் தோண்டி புதஞ்சி போன ஒண்ணைக் காட்டி இதுதான் ஒன்னொட உலகம்னு அதுலே என்னைத் தள்ளாதீங்க.. அந்த உலகம் எனக்கு இப்ப வேண்டாம்.. அந்த உலகம்..  எனக்கு இப்ப அன்னியமா போயிடுச்சி. எனக்கு இனிமே இந்த ஜெயில் தான் உலகம் சுடுகாடு எல்லாம்.   நீங்க கொடுக்கற விடுதலையை   இனிமே  யார்கிட்டெ போயி மார்தட்டிக்கப்போறேன்?  அய்யா தயவு செய்து எனக்கு விடுதலை கொடுக்காதீங்க. தயவுசெய்து இவன் நன்னடத்தை கெட்டவன்னு மறுபடியும்  என்  தண்டனையை   நீட்டி விடுங்க... என்னை   வெளியே  அனுப்பாதீங்க.  என்னை விடுதலை   செய்யாதீங்க . ....."

முருகைய்யன் மிருகம் மாதிரி கத்திக்கொண்டே கைகளை முகத்தில் புதைத் துக்கொண்டு பின்சுவற்றில் சாய்ந்தவாறு   ஓவென்று கத்தியவாறு சரிந்து உட்கார்ந் தான்.

அதிகாரிகள் உறைந்துபோய் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவன் அடிமனத்திலிருந்து வந்த வார்த்தைகள்  அவனுடையதுதானா அல் லது வேறு ஏதோ   பிரதேசத்தின்  எதிரொலியா என்று நிதானிக்க முடியாத சோகத்தின் பாதிப்பில் அவர்கள் பேசமுடியாமல் எழுந்து நின்றார்கள்.

முருகய்யனின் விசும்பல் இன்னும் தொடர்ந்துகொண்டு தான்  இருந்தது.

சிலகேள்விகளுக்கு சட்டப்புத்தகத்தில் சரியானவிடைகள் கிடைக்கா தென்று   அவர்களுக்கு தோன்றியிருக்கக்கூடும்!

   *சமீபத்தில் நான் பார்த்த ஒரு ஆங்கிலப்படத்தின் ஒரு சின்ன கதாபாத்திரத்தின் வரிகளால்  தூண்டப்பட்ட   ஒரு கற்பனை சித்தரிப்பு இது.
 படத்தின்பெயர் "SHAWSHANK REDEMPTION"

Shawsank redemption"In 1947, young banker Andy Dufresne (Robbins) is found guilty of the murder of his wife and her lover; he is sentenced to life in prison, and his sentence is to be served at Maine's Shawshank penitentiary. The conditions are terrible, many of his fellow prisoners are sadistic, and many of the guards are even worse — but life begins to look up as Dufresne becomes acquainted with an old black con, Ellis Redding (Freeman, who also serves as the movie's narrator), commonly referred to as Red. A friendship begins after Red, "the man who knows how to get things", procures a rock hammer for Dufresne, an object he wishes to own in order to pursue a hobby in rock collecting. The friendship will only strengthen over the coming years.

Twenty years pass within the prison walls, showing the growth and strength of Andy and Red's friendship, Andy's various attempts to better the life of his fellow inmates through education (facilitated by the financial advice he gives the prison's corrupt warden and guards), the quest to prove his innocence, and the attempt to remain mentally free and hopeful even when surrounded by the crushing gray of prison walls.

No comments:

Post a Comment