vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Friday, September 3, 2010

மொழியற்ற உலா _ கவிதை

                               

கவிதை:

 மொழியற்ற  உலா
  ---------------------------

             தவழும் பூமியை நெருடும்
             ஈரக் கிரணங்கள்
             இளங்காலை.

              முத்துக்கள்  பூத்த மொட்டுக்கள்
              இலைகள  சூடிக் கொண்டு
               சிரித்துப் பார்க்கும்;சின்ன வாய் திறந்து
               வானவில்லைத் தரித்த மரங்கள்
               தோகை விரிக்கும் வழியெங்கும்.

                வழக்கத்திற்கு வளைந்து கொடுக்காத
               வானம் முகில்களால்
                எழுதி எழுதிக் கலைக்கும்
                மொழியற்ற கவிதைகள்..    
                 பொழுதற்று.

                வேளைக்கு ஒரு நிறம் பூசித்
                 தன்னழகை விண்ணில் தேடியவாறு
                 அண்ணாந்து கிடக்கும் கடல்.

                 காற்றில் தள்ளாடும் மலரென மழலைகள்
                  புல்வெளியில் கூவிக் குதிக்கும் ஆனந்தத்தால்
                  இயற்கையின் எழில் ஒரு கணம்
                   தோற்றுப் போகும்.

                                    வைதீஸ்வரன்   [யுகமாயினி ]
               
                

No comments:

Post a Comment