vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Sunday, September 28, 2014

பிடித்தவற்றுள் மேலும் சில கவிதைகள்

            

>  பிடித்தவற்றுள் மேலும் சில கவிதைகள்


வைதீஸ்வரன்



சொல்லக்  கேட்டு
சொல்லச் சொல்லி
பிறந்த்து  ஒருசொல்
>
சொல்லச் சொல்ல
>
சொல்  பெருகியது.
>
பின்னிப் பின்னி
>
உருவானது
>
ஒரு  சொல்வலை.
>
சொல் தன்னைத்  தனே
>
சொல்லத் துலங்கியது.
>
தான் வரித்த வலைக்குள்
>
தானே சிக்கியது சொல்
>
மலரென்ற  ஒருசொல்
>
கிளையென்ற
>
ஒருசொல்லிலிருந்து
>
காற்றென்ற சொல்லைத்
>
தழுவி
>
மண்ணென்ற  ஒரு
>
சொல்மீது
>
உதிர்கின்றது
>
மண்ணில்புதைந்த
>
விதையென்ற  ஒரு
>
சொல்
>
மண்ணைக் கீறி
>
மரமென்ற ஒரு சொல்லாக
>
முளைத்து
>
வான்  என்ற
>
சொல்லைத்
>
தீண்டி  நிற்கிறது

ரா..ஸ்ரீனிவாசன்

>


மொண்ணை மனசு


> முற்றத்தில்
>
மழை நீர் கொஞ்சம்
>
மிச்சமிருந்தது.
>
>
கத்திக் கப்பல்
>
செய்து தா வென்றது
>
குழந்தை
>
கத்தி  எதற்கு
>
என்றேன்
>
முட்டும் மீனை
>
வெட்டுவதற்கு என்றது
>
விழிகள்  விரிய
>
முனை  கொஞ்சம்
>
மழுங்கலாக  செய்து
>
கொடுத்தேன்.




இறகின் பிறகும்
> ----------------------------------



>
பாலொத்தவெள்ளையும்
>
பரிச்சயமானதொரு
>
மென்மையும்
>
அந்த  இறகிலிருந்தது.
>
இறந்திருக்க
>
முடியாதென்ற
>
பெரு நம்பிக்கையுடன்
>
தேடியலைந்தேன்
>
அப்பறவையை..
>
எதிர்ப்பட்ட
>
மின்கம்பங்களில்
>
எருமையின்முதுகில்
>
என
>
எங்கேயும் இல்லை.
>
அம்மாதிரியொரு
>
பறவையால்
>
கவலை பெருக்கியும்
>
கையிலிருந்த  இறகு
>
கருக்கியும்
>
கவிழ்ந்து
>
கொண்டிருந்த
>
இரவில்
>
வெண்பறவை தென்படா
>
வானம்வழி
>
பறந்து  மறைந்த
>
கருங்காக்கை
>
எஞ்சியிருந்த
>
அவ்விறகில்
>
எச்சம் இட்டது
>

கார்த்தி-

No comments:

Post a Comment