vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Friday, October 28, 2016

வைதீஸ்வரனும் நானும் அசோகமித்திரன்

  வைதீஸ்வரனும் நானும்
அசோகமித்திரன்



நான் சென்னையில் வசிக்க வந்த 1952ம் ஆண்டிலேயே எனக்கு அறிமுகம் ஆன மிகச் சிலரில் வைதீஸ்வரனும் ஒருவர். அப்போது அவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார் என்று நினைக்கிறேன். சைக்கிளில் போய் வருவார்.அவர் எஸ்.வி. சஹஸ்ரநாமத்தின் கடைசி சகோதரியின் மகன்.

இன்று நினைத்துப் பார்க்க முடியாது. சஹஸ்ரநாமம் பெரிய ஹீரோ அல்ல. ஆனால் திரைப்படத்துறையில் மிகவும் மதிக்கப் பட்டவர்.நெருங்கினவர்களுக்குத்தான் தெரியும் அவர் என்.எஸ்.கிருஷ்ணனையும் பாகவதரையும் விடுவிக்க எவ்வளவு வகையில் பாடுபட்டார் என்று.  என்.எஸ்.கே சார்பில் அவருடைய நாடக்க் குழுவைச் சிதற விடாமல் பார்த்துக் கொண்ட்தோடு சில வெற்றிகரமான நாடகங்களையும் தினம்தோறும் நடத்தினார். ‘பைத்தியக்காரன்,’ மனோஹரா ஆகிய நாடகங்கள் அவருடைய நிர்வாகத் திறமையில் சிறப்பாகப் பல முறை மேடையேறின. என்.எஸ்.கே அவர்களுக்கு அவ்வளவு விசுவாசமான நண்பர் சஹஸ்ரநாமம் தவிர யாரும் இருந்திருக்க முடியாது.

சென்னை ராயப்பேட்டை தாண்டவராயன் கோயில் தெருவில் வசித்த சஹஸ்ரநாமத்தின் வீடும் ஓர் அதிசயம். எவ்வளவு முதியவர்கள், இளைஞர்கள்,  குழந்தைகள் அந்த வீட்டில் இருந்தார்கள்! வைதீஸ்வரன் ஒரு கட்டத்தில் வேறு இடத்தில் இருந்தாலும் அவரை நான் தாண்டவராயன் தெரு வீட்டின் தொடர்ச்சியாகத்தான் உணர முடிந்தது. அவர் படிப்பு முடித்துச் சில காலம் நாடகம், சினிமாத் துறைகளில் இடம் கிடைக்குமா என்று எதிர்பார்த்திருக்கக்கூடும். எனக்கு ஒரு பெரிய ஆச்சரியம் பாடல்களுக்கு வரிகள் எழுத முற்பட்டது. ஏதோ ஒரு வித்த்தில் அவர் கவிஞனாகவே இருந்து வந்தார். அவருடைய கவிதை அச்சில் முதலில் வந்தது சி.சு.செல்லப்பா வெளியிட்ட எழுத்து பத்திரிகையில் வந்த்து. ’எழுத்து பத்திரிகை சிலரை அதிதீவிரமாகச் செல்லப்பா வழிபாடு செய்பவர்களாக மாற்றியது. உன்னத மனிதர்களை வழிபாடு செய்வதில் தவறில்லை. செல்லப்பா ஓர் உன்னத மனிதர். ஆனால் அவரிடம் ஒரு இளைய தலைமுறையை உருவாக்கக்கூடிய தலைமை ஆற்றல் சற்றுக் குறைவு. அப்படி இருந்தால் அவருடைய பத்திரிகையையும் அவருடைய பரிச்சயத்தையும் பெறும் பேறாக நினத்தவர்களை அவர் ஊக்குவித்திருக்க வேண்டும். அவர் நிறைய நூல்களை வெளியிட்டார். ஆனால் அவரே உலகம் என்றிருந்த முக்கியமானவர்களை நூலாசிரியர்களாகக் கௌரவிக்கத் தவறி விட்டார் என்றே கூற வேண்டும்..வைதீஸ்வரனின் முதல் கவிதை தொகுப்பு உதய நிழல் சென்னை வாசகர் வட்டம் பிரசுர அமைப்பு விற்றது.

வைதீஸ்வரனின் முதல் உரைநடைப் படைப்பு கணையாழிபத்திரிகையில் வெளியாயிற்று. இந்த ஐம்பது ஆண்டுகாலத்தில் பல வெளியீடுகளில் அவருடைய சிறுகதைகள் வெளிவந்திருக்கின்றன. சமீபத்தில் சென்னை கவிதா பிரசுரம் வெளியிட்டிருக்கும் தொகுப்பில் 34 கதைகள் உள்ளன. பல கதைகள் நம்மைத் தூக்கிவாரிப் போடுகின்றன. கவிதைகள் எழுதினாலும் அவர் அகவயப்பட்டவர் அல்ல. அவருடைய கவனத்தில் ஏராளமானவர்கள் உண்டு. ‘கனவில் கதை,’  எங்கிருந்தோ வந்தான்,’ ‘தவளை ரத்தம்,’ ‘முத்தம்மா’ 9இன்னும் பல கதைகளில்) அவர் எல்லாத்தரப்பு மனிதர்களையும் அந்தரங்கமாக அறிந்திருக்கார், நேசித்திருக்கிறார்.

நான் அவருடைய பெரியம்மவின் மகன் ராஜாமணி மூலம் அவரைச் சந்தித்தேன். அவரை மேடையில் பார்த்திருக்கிறேன். திருப்பதி அருகில் உள்ள திருச்சானூரில் அவருடைய திருமணத்திற்குச் சென்றிருக்கிறேன். அப்போது அவர் பரோடா பல்கலைக்கழகம் சென்று அருங்காட்சியியலில் பட்டம் பெற்றுத் திரும்பியிருந்தார்.

வைதீஸ்வரனின் கவிதைகள் பல மொழிகளில் வெளி வந்திருக்கின்றன.அவருடைய முதல் உரைநடைப் படைப்பு கணையாழி பத்திரிகையில் வந்த்து என்று நினக்கிறேன். சமீபத்தில் அவருடைய 34 கதைகள் கொண்ட சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பை சென்னை தி.நகர் கவிதா பதிப்பகம் வெள்யிட்டிருக்கிறது. அதில் பல கதைகள் நம்மைத் தூக்கிவாரிப் போட வைப்பவை. கவிஞனாக இருந்தாலும் வைதீஸ்வரனின் கவனம் ஏராளமானோர் பால் சென்றிருக்கிறது கனவின் கனவு’ ‘முத்தம்மா’ ‘கனவில் கனவு’ ’தவளையின் ரத்தம் ஆகிய கதைகள் படிப்போரைத் திடுக்கிட வைக்கும்.

வைதீஸ்வரனுடன் என் உறவு அறுபது ஆண்டுகள் முடிந்து கொண்டிருக்கிறது. இன்னும் அவருடைய பெரியம்மா மகன் என்.வி.ராஜாமணியின் நிழல்  படர்ந்திருக்கிறது.


Tuesday, October 18, 2016

ON READING BOB DYLAN with MUSIC RUNNING THROUGH MY MIND வைதீஸ்வரன்

ON  READING   BOB  DYLAN
with
MUSIC RUNNING  THROUGH  MY  MIND


வைதீஸ்வரன் 
பாறைக்  கூட்டங்களிடையே
நீ கல்லுடைக்கும் ஓசைகள்
யாருக்குக்  கேட்குமடீ  பெண்ணே!
தலையைத்  தொட்ட  மாதிரி
அங்கே  ஒரு  நிலவு...
அது  உன்  கண்ணுக்கு வெகுதூரம்....
அவ்வப்போது  வீசுகிறது  அமைதிக் காற்று
ஆனாலும்  அகாலங்களிடையே
இடை இடையே  சாம்பல் தூள்
உயிர் ஓலங்களின்  உள்ளோசையுடன்...
.அய்யோ  கடவுளே!
இறங்கி  வா....
இறங்கி  வா...
கையில் பாறைத்  துண்டை  இறுக்கிக் கொண்டு
 இறங்கி  வா
உன்  வீட்டை  யாரோ  இடிக்கிறார்கள்..
பாதைகள்   தாறுமாறாகின்றன.
கிலுகிலுப்பைகளை  இரைத்து விட்டு
குழந்தைகள்  எங்கோ  தொலைந்து  போனார்கள்..!
கண்டு  பிடி..கண்டு பிடி...
வானத்தைக்  கிழித்துப்  பார்
சூரியனை  மீண்டும்  பெற்றெடு
உலகத்தை  இன்னும் ஒரு முறை
சத்தியமாய்க்  கட்டிப் பார்...
பாறைகளுக்கிடையே  நீ கல்லுடைத்த  ஓசைகள்
தான்  அதற்கு  உரமாகக்  கூடும்....



  





Thursday, October 13, 2016

அசந்தர்ப்பம் - வைதீஸ்வரன்

        அசந்தர்ப்பம் 
வைதீஸ்வரன்



 மேம்பாலத்தை  விட  சுரங்கப் பாதையில்வாகனம்  ஓட்டுவது  சிக்கலானது. . அப்படித்தான் தோன்றிற்று.  அவனுக்கு,  வண்டியின்  இரண்டு சக்கரங்களும் இரட்டைகளைப் போல் மிகவும்  ஒற்றுமையான  வேகத்தில் தரையைத் தொட்டும்  தொடாமலும்  சுற்றியது  போல் இருந்தது பூமியை  சீண்டிக்  கொண்டே  பாயும் வேகத்தில்  மனம்  மிதக்கிறது .

 இந்த சுரங்கப் பாதையில்  இறங்கி   ஏறித்  தாண்டி விட்டால் பிறகு  இரண்டு  மூன்று  குறுக்கு சந்துகளில் வளைந்து நுழைந்து   பெரிய  தெருவுக்குள்  திரும்பி  விட்டால்  வந்து விடும்  அந்தப்  பெரிய  ஆஸ்பத்திரி.

  அந்த ஆஸ்பத்திரியை  அவன்  இதற்கு  முன்பு  எத்தனையோ தடவை  கடந்து போயிருக்கிறான். அப்போதெல்லாம்  அது ‘வெறும்” ஆஸ்பத்திரியாக  இருந்தது.  ஆனால்  இன்றைக்கு  அது  அவனுக்கு ஒரு  தாயார்  மாதிரி.  ஒரு  பரந்த கருணையுடன்  அரவணைக்கும்  ஆலமரம்  மாதிரி. இன்று அவனுக்காக  அது  காத்திருப்பதாகத்  தோன்றியது..!!

  அவனுடைய  இரண்டு பிஞ்சுக்குழந்தைகள்  அங்கே  சின்னக் குழாய்களைப் பொருத்திக்  கொண்டு  மூடிய கண்ணாடிப் பேழைக்குள் உயிர்த் துடிப்புடன் தூங்கிக்  கொண்டிருக்கின்றன..  பிறந்து  சில மணி நேரம் தான்  ஆகி இருந்தது.
  வீட்டில்  தொலை பேசியில் செய்தி கேட்டவுடன் அவனுக்கு  சந்தோஷமும்  துக்கமுமாக  மனசும்  உடலும் பரபரத்தது.  சில நிமிஷங்கள்  அவன்  என்ன செய்தானென்றே  நிதானிக்க  முடியாமல்  இருந்தது. அப்படி  ஒரு  பரபரப்பு.  ஒரு  குட்டிக் கரணம் போட வேண்டுமென்று தோன்றியது. இரண்டு மூன்று முறை  காற்றைக்  குத்தினான்! சுவற்றில் மாட்டியிருந்த  மனைவியின் போட்டோவைத் தூக்கிக் கொண்டு  சுற்றி சுற்றி  வட்டமிட்டான்.

  முத்தமிட்டான். சமையலறை  அலமாரியைத் திறந்து  அரிசியை இரண்டு கைகளிலும் வாரிக் கொண்டு  வந்து  வீட்டின் கொல்லை வெளியில் எறிந்தான். “ஹாஹ் ஹா..”  என்று  மரங்களில்  வேடிக்கை பார்க்கும்  காக்கைகளைப்  பார்த்து  சிரித்தான்.

  பரபரப்பு அடங்கி  அவன்  மீண்டும்  இயல்பாகி  வழக்கமான  இறுகிய  முகத்துடன் ஆஸ்பத்திரிக்கு  கிளம்புவதற்கு  அரை மணி  ஆகி விட்டது.  சாலையில் அதிக வாகனங்கள்  இல்லை. இருந்தாலும் அவைகள் அவனை சுலபமாக ஓட்ட முடியாமல் தடங்கல்  செய்வது  போல்   ஆத்திரப் படுத்தியது.. ஆனாலும் மசிந்து அவன் வேகத்தைக்  குறைக்க விரும்பவில்லை.

   அதே சமயம் இரட்டைக் குழந்தைகளைப் பெற்று விட்ட  மகா  அசதியுடன்   அந்த மகா வலியைப் பொறுத்துக் கொண்டு  கணவனின் வருகைக்காக  காத்துக்  கொண்டு கண் மூடிப் படுத்திருக்கும் அவன் மனைவியின் முகம்  அவனைப்  மேலும்  பறக்க வேண்டும்  என்று துரத்தியது..

   அவன் மனோ வேகத்துக்கு சமமாக வாகனத்தை ஓட்ட முயன்றான். சுரங்கப்  பாதையை அருகி விட்டாலே  ஆஸ்பத்திரியை  நெருங்கி விட்டது போல்  தான்......... இதோ வந்து  விட்டது...

     சுரங்கப் பாதையின்  இறக்கம்  இன்று மேலும்  இறக்கமாக இருப்பது போல் தோன்றுகிறது.  இறக்கம் முடிந்து மேலேறும் போது வாகனம் ஒரு துள்ளுத்  துள்ளி எம்பியது போல்  எழுந்து  இறங்கியது. . அந்தத் துள்ளல்  அவனுக்குள்  சிரிப்பை வரவழைத்தது.  தனக்குத்  தானே சிரித்துக்  கொண்டான்.  ஒரு அம்பின் வேகத்தில் அவன் பாலத்தின் மேலேறியிருந்தான்.

. அப்போது  நிதானமாக இடது பக்கத்திலிருந்து  திரும்பிய  ஒரு பெரிய சுமை லாரியை அவன்  வாகனம்  கவனிக்கவில்லை.!!.......................

 லாரிக்கடியிலிருந்து வந்த   ‘அம்மா..’ ....என்ற முனகல் அந்தக் கணத்திலேயே காற்றோடு போய் விட்டது.

அங்கே கடந்து போனவர்கள்  என்ன நேர்ந்தது என்று அனுமானிப்பதற்கே  பல நிமிஷங்கள்  ஆகி இருக்கலாம். மல்லாந்து ஓரமாக நொறுங்கிக் கிடந்த வாகனத்தின் ஒரு சக்கரம் மட்டும் வேகமாக  தன்னந்தனியாக  சுற்றிக் கொண்டிருந்தது..

   ஆஸ்பத்திரி  பிரசவ வார்டில்  படுக்கையிலிருந்து இரண்டு முறை கைகளை  ஊன்றிக் கொண்டு எழுந்திருக்க  முயற்சி  செய்து  மீண்டும் விழுந்தாள்  அவன் மனைவி..   நாலாவது  கட்டிலிடம் நின்று கொண்டிருந்த  வயதான  நர்ஸ் ஒருவள்  அதைக் கவனித்து  அவள் அருகே வந்து  நின்று பார்த்தாள்.

 “என்னம்மா..கண்ணூ..?  இப்ப  நீ எழுந்துருக்கக் கூடாதும்மா...  கொஞ்ச  நேரம் பொறுமையா  இரு..”  என்று  பரிவுடன் நெற்றியைத்  தடவி  போர்வையை சரி செய்து  விட்டாள்.

  மனைவியின் பார்வை  நாலாபக்கமும்  அலைந்து கொண்டே இருந்தது. கதவுப் பக்கம் பார்த்தது. ஜன்னல் வழியே  தெரிந்த வெளியைப் பார்த்தது. . அவள் கைவிரல்கள்  போர்வையைப் பிறாண்டிக் கொண்டிருந்தன. உதடுகள்  பேசுவதற்கு  நடுங்கியது.

  “ என்னாம்மா?.......”

“ இல்லே  அவர் எங்கே?  அவரு ஏன்   வரலே?...இன்னும்  ஏன்  அவர் வரலே?.. அவரைப்  பாக்கணும்..”   வாய் லேசாக  முணகியது.

   “வந்துடுவாரும்மா..........போன் பண்ணியிருக்கேனே!...........”

“ இல்லே  ஒரு வேளை... அவரு  வர மாட்டாருன்னு  நெனைக்கிறேன். ...!
“ஏன்  அப்படி  சொல்றே? “...........

“   ரெட்டைக் குழந்தை பொறந்ததுலே  அவருக்கு  கோபமா  இருக்கலாம்!”  “
  “ அப்படிப் பேசாதே கண்ணு....அவருக்கு என்ன கோபம்?. அவருக்கு தெரியாதா  என்ன?   நான்  போய் மறுபடியும் போன் பண்ணிப் பாக்கறேன்..  நீ  பேசாம படுத்துக்கோ! “

 மனைவி மேலும் சொன்னாள்..

 “ இல்லே... ரெட்டையின்னாலும்  பொறுத்துக்கலாம்.... எனக்கு  பொறந்துருக்கறது  ரெண்டும்  ஒரே  மாதிரி..  “பாமா.....ருக்மணி...  .
  “ இதுக்காக  அவரு யாரு மேலே  கோபப் படுவாரு  கண்ணூ?.. சும்மா எதையாவது நெனைச்சிக்காதே .. நான்  இப்போ போய் கெளம்பிட்டாரான்னு  மறுபடியும் போன் பண்றேன்..”

“ இல்லே ஸிஸ்டர்.. வேண்டாம்... மறுபடியும்  எதுக்கு  போன் பண்ணணும்?  அவரே  வரட்டும்.  கோபம்  தணிஞ்சு  எப்படியும் அவரே  வந்துடுவார்... அவரு வர்ர வரைக்கும்   நான்   என் கொழந்தைகளைப் பாத்துகிட்டு இருக்கேன். ...கொழந்தைகளை  கொண்டு வாங்க.....”  என்றாள் மீண்ட நம்பிக்கையுடன்..

  அவள்  நம்பிக்கை  சிதறி போகும்  அந்த  அதிர்ச்சியான  கணம்  மெள்ள  நெருங்கிக்  கொண்டிருந்தது.   .