vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Wednesday, October 25, 2017

நந்தியின் கதை

     நந்தியின்  கதை
         
 வைதீஸ்வரன்

வாழ்க்கையில் சம்பவங்கள்  அதிசயத்தக்க  ஒழுங்குடன்  நடை பெறு கிறதுஆனால் அதை  ஊகித்துக்கொள்ள நமக்கு  அகப்பார்வை அவசி யமாக  இருக்கிறது,

ப்ரொபஸர் சுவாமிநாதனை எனக்கு எப்படி தெரியவந்தது...?  அவர்  எனது இளங்கால  நண்பனின்  சம்மந்தியென்று  அறிகிறேன்அந்த  நண்பன் சொல்லுகிறான் - அவனுடைய ம்மந்தி என்னைப் பற்றிக் கேள்விப்பட்டி ருக்கிறாராம்!!

பிறகு  சுவாமிநாதன்  அவர்களை  நான் சந்திக்கிறேன்அவருடைய  தொல்லியல்  ஆர்வங்களை  பற்றி அறிகிறேன்அஜந்தா எல்லோரா  பல்லவர்கால சிற்பங்கள்; பற்றிய அவருடைய  ஸ்வாரஸ்யமான வரலாற் றுத் தகவல்கள்ஆதிகாலத்திலிருந்து பரிணமித்து இன்றுவரை வளர்ந்தி ருக்கும் மொழிகளின்  சரித்திரம்; காலங்காலமாக  மனித வாழ்க்கைக்கு செழுமைகூட்டிய பல்வகையான பிரும்மாண்ட  மரங்களைப் பற்றிய  அரிய உண்மைகள். இதுபோல ன்னும் எத்தனையோ மரபுவிஷயங்  களை ஆர்வலர்களிடம்  பகிர்ந்துகொள்வதையே தன் வாழ்க்கையின் முக்கியமான காரியமாக செய்துகொண்டிருக்கிறார்  சுவாமிநாதன். அவரை அறிந்துகொண்டது எனக்கு பெருமிதமாக ஒரு நற்பேறாக எண்ணத் தோன்றுகிறது.

 அவர் என்னை  புதுக் கோட்டைக்கு  விருந்தினராக  அழைத்தார். அங்கே  அவர்  பல வருஷங்களாக  ஈடுபட்டுக்கொண்டிருக்கும்  மேற்சொன்ன விஷயங்களை எனக்கு நேரிடையாக காண்பிப்பதற்கும்   புதுக் கோட்டை யை  சுற்றிப் பரவிக்கிடக்கும்  தொன்மையான  கல்வெட்டுக்கள்  சிற்பங்கள் கோவில்கள்  இவற்றை  காண்பிப்பதற்கும்  என்னை  அன்பு டன்  அழைத்திருந்தார்.

அங்கு  பரவிக்கிடந்த  சிதிலமான  பல  பல சிறிய  கோவில்கள் பல்லவர் காலத்துக்கு  முந்திய  முயற்சிகளென்றும்கோவில் கட்டும்  கலைஅறிவு தமிழ்நாட்டில் அங்கிருந்துதான் தொடங்கி இருக்கக்கூடுமென்றும் சொன்னார். இதை  நேரில் பார்த்தது  எனக்கு ஒரு அரிய அனுபவம்.

வண்ணங்கள்  உதிர்ந்து  ஓவியங்கள்  சேதமாகியும்  இன்னும் வியப்பை  உண்டாக்கும்  சித்தன்ன வாசல்  கற்கோயிலைக்  பார்த்தேன்நமது முன்னோடிகள்  எவ்வளவு பெரிய கலைஞர்கள்!! கற்பனை செய்து பார்க்க  பிரமிப்பாக  இருந்தது.

நார்த்தா மலையில்  எனக்கு  இன்னொரு  முக்கியமான  அதிசயம் காத்தி ருந்ததுஅதுதான்  அந்த  நந்தி சிற்பம்.

சிதிலமான  பழைய சிவன் கோவிலின்  முன் வாசலில்  ஒரு இளங்காளை அழகாக அடக்கமாக  வாரியெடுத்துக்கொள்ளத் தூண்டும் குழந்தை யைப்போல  வாலை மடக்கிக்கொண்டு உட்கார்ந்திருந்தது..

ஒரு சின்ன கற்பாறை  இவ்வளவு  அற்புதமாக  சதைப்பற்றான உயிர்ப்பு டன்  உணர்வுடன்  ஒரு காளையாக  எப்படி வடிவெடுத்ததுஅதை வடித்த அந்த உன்னதக் கலைஞன் கடவுளுக்கு நிகரானவன்  என்று சொல்லவேண்டும்!

நான்  அதை ஆசையுடன்  புகைப் படம்  எடுத்தேன்.

நான்  சென்னை  திரும்பிய பின் அந்தப் புகைப் படம்  வழக்கம் போல் என் புத்தக அலமாரியின்  ஒரு  மூலையில் அடக்கமாகிவிட்டதுமீண்டும்  சில  மாதங்கள்  கழிந்து  அலமாரியிலிருந்து ஒரு  கவிதைப் புத்தகம்  எடுக்க  முனைந்தபோது  அந்த  காளைப் படம் தரையில்  விழுந்ததுபார்த்த  க்ஷணத்தில்  அது எனக்குள்  இருந்த  ஓவியனைத்  தூண்டி விட்டதுஅதைப் படமாக  வரைந்தால்  என்னஇல்லை.....இப்போதே  வரைந்தால் என்னஇந்தக் கணமே அதைச்  செய்யவேண்டும்  என்று  ஆர்வம்  என்னை  விரட்டியது..

 அந்த படத்தை  முடிக்க எனக்கு  இரண்டு  மணி நேரம்  ஆனது..  என்ன  இருந்தாலும்  நான்  அந்த  மகா சிற்பியிடம்  போட்டி போட  முடியாது. என்  ஆர்வம்தான் அதன்  குறை நிறைகளைத்  தாண்டி அந்தப்  படத்தில் ஒரு வித லக்ஷணத்துடன்  தெரிந்தது.  இது ஒரு  தொழில்  ஓவியனின்  காரிய மல்ல.

நான்  படத்தை  முடித்து  விட்டு  நிமிர்ந்தபோதுதான்  கவனித்தேன்... என்  அம்மா என் பின்புறம்  தடியை ஊன்றிக்கொண்டு நின்றுகொண்டிருந்தாள். எனக்கு மிகவும்  ஆச்சரியம்.

பல காலமாக  நான் அடிக்கடி படம் வரைவதுண்டு..... ஒருமுறைகூட  என்  அம்மா அதைப் பொருட்படுத்தியதில்லை.  கவனித்து நின்றதில்லை. ஆனால்  இந்தக் காளையின் படம்.....

 “ என்ன  நந்திகேஸ்வர்ர்  படமா?”  அம்மா  மெதுவாகக் கேட்டாள்...

அம்மாவுக்கு  அப்போது  92 வயதுஅவ்வளவு நேரம் எனக்குப் பின்னால் தடியை  ஊன்றி நின்றுகொண்டிருந்ததே  அவளுக்கு  பெரிய அவஸ்தை யாக  இருந்திருக்கவேண்டும்!.

 “ஆமாம்...”  என்றேன்.

ரொம்ப  நன்றாக  இருக்கே!...எனக்கு இந்தப் படத்தை  தரயா? ..”

அம்மாவின் அந்தப் பாசம் நிறைந்த குரலும் குழைவும் தொனியும்  கேட்டபோது நான்  நெகிழ்ந்துபோனேன்..

 “..தாராளமா...!  எடுத்துக்கோயேன்!...”

 “இதை என் அறையிலே  கொண்டு  போயி வைக்கறியா?...”

நான்  உடனே  அந்தப் படத்துக்கு அழகான சட்டம் போட்டு அம்மாவின்  அறையில்  கொண்டுபோய் வைத்தேன்

 மறு  நாள்  காலை  விடிந்தபோது  ஏதோ  வீடெல்லாம்  வாசனை. அம்மா வின்  அறைக்குச்  சென்றேன், வாசனை  அங்கிருந்துதான்  வந்துகொண்டி ருந்தது. ஊதுவத்தி மணம் ..

 என் நந்தி படம் அங்கே பிறையில்  வைக்கப்பட்டு  மாலையுடன்  அழகாக காட்சி தந்துகொண்டிருந்ததுஅதற்கு முன் கற்பூர விளக்கு. படத்தை ஜ்வலிக்கச் செய்துகொண்டிருந்தது.. நந்தியின் நெற்றியில் சந்தனம் குங்குமப்பொட்டு... பிறை முழுவதும் ஒரு சன்னிதானம் மாதிரி  ஆகி  விட்டது.

ஒரு கணத்தில் எனக்குள் அநேக  உணர்வுகள்  மின்னி மறைந்து போயின.

நேற்று நான்  வரைந்த  நந்தியின்  படமா....இது.?’  அந்தப் படத்திற்கும்  இங்கே  காட்சி தரும்  நந்திக்கும்  ஏதோ ஒரு சம்மந்தமற்ற  வித்தியாசம்அந்நிய உணர்வு  இப்போது நேர்ந்துவிட்ட  மாதிரி  ஒரு புதிர்த் தன்மை!.

இதற்கு இப்போது  இன்னொரு பரிமாணம்...ஒரு  புனிதத்தன்மை  வந்து விட்டதுநான்  மட்டும் இதை பாத்யதை கொண்டாட முடியாத உயரத்தில்  இந்த  நந்தி  இப்போது உட்கார்ந்துகொண்டிருக்கிறது!..

அம்மாவைப் பார்த்தேன்அம்மா தலை குனிந்தபடி கையில்  ஒரு  பழைய புத்தகத்தை வைத்துக்கொண்டு  நந்திகேஸ்வரர்  அந்தாதியைப் படித்துக்கொண்டிருந்தார்

  நான்  படத்தை  சற்று நெருங்கிப் பார்க்க  நகர்ந்தேன்.

அதை  நீ  தொடப்படாது..  குளிக்காம  தொடப்படாதுகுளிச்சுட்டு வந்து  ரெண்டு  பூப் போடு!”  என்றாள் எச்சரிக்கையுடன்!

 நான்  என் படத்திலிருந்து  விலகிப்போனேன்.

               **********
  
னாலும்  அம்மாவால்  அதிக  நாட்கள்  அந்தப் படத்திற்கு  பூஜை செய்ய முடியவில்லைஅநேகமாக ஒன்பது மாதங்கள் விடாமல்  செய்துவந்தாள்.  வயது  93  ஆகிவிட்டது.

 ஒரு  நாள்  இரவு  முழுவதும்  அவள் நெஞ்சு  மூச்சிரைத்துக்கொண்டி ருந்தது. மூச்சிரைப்பிலும் அவள் உதடுகள்  ஏதோ முணுமுணுத்துக் கொண்டே இருந்ததுகாலையில் பார்த்தபோது அநேகமாக  அவள்  அமைதியாகிக் கொண்டு வந்தாள்.

 நான்  எழுப்பி உட்கார வைக்கப் பார்த்தபோது  அவள்  கண்கள்  லேசாகத் திறந்துகொண்டது. கைகள் மெல்ல உயர்த்தி  விரல்களை  வெளியில் நீட்டி நீட்டிக் காட்டியதுஅவள்  காட்டிய  திசையைப் பார்த்தேன்.

 அங்கே  ஒரு ஸ்டூலில்  பூத்தட்டு,  தட்டு நிறையப் பூக்களுடன்  இருந்ததுஅந்தத் தட்டை அம்மாவின்  அருகில்  கொண்டுவந்து காட்டினேன்

நந்தி படத்தின் பக்கம்  லேசாக  தலையைத்  திருப்பி  கைகளில் அகப்பட்ட பூக்களை எடுத்து அவள்  நந்தியைப் பார்த்து  வீசினாள்

 பூக்கள்  நந்திக்குப் பதிலாக  அவள்  காலடியிலேயே  விழுந்தன !!

அம்மா  கண்ணை மூடிக் கொண்டாள்...........
            


********* 
ந்த நந்தியின் படம் இப்போது எங்கள் குடும்பச்சொத்தாகஆகிவிட்டதுஅதை மூன்று  பிரதிகளாக  [Reproductions}  ஆக்கி  என்  வாரிசுகள்  மூவரு க்கும்  கொடுத்துவிட்டேன்

அந்தப் படத்தில்  நந்தியின்  நெற்றியின் மேல் என்  அம்மா  இட்ட  குங்கும சந்தனப் பொட்டு வெகு நாட்கள் வரை  அழியாமல்  இருந்தது.

அழியாதது  ஞாபகங்கள்  மட்டும்தான்.....

                   






No comments:

Post a Comment