vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Monday, August 18, 2014

எனக்குப் பிடித்தவற்றில் சில கவிதைகள்

   எனக்குப் பிடித்தவற்றில்


சில  கவிதைகள்

வைதீஸ்வரன்
1.

    அப்பா!...உன்  ஆடுகளை விற்றுத் தான் என்னை
    பார்க்க வர  முடியும் என்கிற  தொலை தூரத்தில் 
  என்னைக்  கட்டி வைக்காதே!
    காடுகள்  ஆறுகள்  மலைகள்  இல்லாத  ஊரில்
    முடிக்காதே  என்  திருமணத்தை...
    கோழி  கூவி  பொழுது  புலராத  முற்றமில்லாத
    வீட்டிலோ....கொல்லைப்புறத்திலிருந்து  
    சூரியன்  அஸ்தமிப்பதை பார்க்க  முடியாத  வீட்டிலோ 
    மாப்பிள்ளை  பார்க்காதே!
    இது வரை  ஒருமரம் கூட  நடாத பயிர்  ஊன்றாத
    மற்றவர்கள் சுமையைத்  தூக்காத  கை என்ற  
    வார்த்தையைக்  கூட  எழுதாத
    எழுதத்  தெரியாதவன்  கையில்  
    என்னை  ஒப்படைக்காதே!
    எனக்குத்  திருமணம்  செய்ய  வேண்டுமானால்
    நீ  காலையில்  வந்து  அஸ்தமன நேரத்தில்
    நடந்தே  திரும்பக் கூடிய இடத்தில் செய்து  வை  
    இங்கே  நான்  ஆற்றங்கரையில்  அழுதால்
    அக்கரையில் உன்  காதில்  பட்டு 
    நீ  வர வேண்டும்
நிர்மலா புதில்  எழுதியது. [சந்தால்  மொழிக்  கவிதை ] (Translated  by  AMBAI)

2. 

யாண்டுளானாயினு  மறியேனோரும்
  புலி சேர்ந்து  போகிய கல்லளை போல
  வீன்ற வயிறோ விதுவே
  தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே!
      {அதன் எளிமையான  வடிவம்}
  புலியுறங்கும்  குகை
  எனது  கருவறை -  பாய்ந்து
  புறப்பட்டு வருவான் என்
  புதல்வன்
  தொலைவதும் ஓய்வதும்
  அவன்  குணமல்ல
                                           புறநாநூறு

3.

  இரவில்  காலியான  ரயில்
  இனி நகரப்  போவதில்லை
  எனும் உத்திரவாதத்தை  அவளுக்கு
  அளிக்கவில்ல
  இரயிலின் கடைசி  மூச்சை  உணர்ந்தவள்  போல
நிற்கும்
  பெட்டிக்குள்  கால் வைக்கிறாள்  கிழவி
நகர்கிறது இரயில்
  ஓசையற்று
நகர்வது
  ஒரு  கால் வைத்த  ரயிலா
மறுகால் தொடும்
  தரையா
பதற்றத்தில்
  ப்ளாட்பாரத்தில்  விழுந்தவள்
அப்படியே
  கிடக்கிறாள்.
யாருமில்லாத இரயில் எங்கே
  போகக்  கூடும்?
என்று
  அவளுக்குப் புரியவில்லை
கன்னத்தால் அழுத்தி
  நிறுத்துகிறாள்
நகரும் பிளாட்பாரத்தை.!
 
_ கோகுல  கண்ணன் 


4. காலத்தை  உறங்க  விட  மாட்டேன்

 துன்பங்களின் போது 
தாயாரின் முந்தானைக்குள் பதுங்கியது போல்
நான் கவிதைகளுக்குள் புதைந்து
  கொள்கிறேன்
    **
வியர்வை
  எறும்புகள் 
எத்தனை
  தட்டினாலும்  விலகுவதில்லை
    **
அவள்
  மரணம்  நொடியில்  நிகழ்ந்த்து
எங்கள்மரணம்
 
நொடிக்கு நொடி நிகழ்கிறது.
    **
காலண்டர்கலை
  தின்று  கொழுத்த 
காலத்துக்கு
இயக்கம் மட்டுமுண்டு
இலக்குகள்
  இல்லை
  **
கண்களிலிருந்து
உதிர்வதால்
  அவை
கண்ணீர் போலாகுமா?
  **
அதோ
 
அந்தப்பையன்
 
மீண்டும் நம் குழந்தைப் பருவத்துக்குள்
பந்தெறிகிறான்!!
_TELUGU  POET  N GOPI 

5. எழுச்சி

நல்லாசைகள்  போல்
பூத்துக்
  குலுங்குகின்றன  நந்தவனங்கள்
மொழி யற்ற
  கருணையை
தூவுகிறது காற்று
வெளியெங்கும்
உள்ளத்
  தடையை மீறிப்
பாய்கிறது
  ஒளியின்  ஊற்று
உடல் முனையில்
சூழும்
  துயரக் கரும்புயல்
விலகித் தெரிகிறது
ஆகாசம்
உடல்
  தாண்டும் உயிருக்கு
விளையாட ஒரு
  மைதானம்
பிரபஞ்சம்

6.

உச்சிக்  கோடையில் 
ஒரு
  கூரையைத்  தொட்டு விட்ட
தீப்பிழம்பு
ஊரெங்கும் பரவுமேயென்று
  அஞ்சி
ஏரிக்கு
  ஓட்டமாய்  ஓடினேன்
இருந்த
  இட்த்தில்  ஏரியைக்  காணவில்லை
எங்கே எங்கே யென்று
ஊரெங்கும் கேட்ட போது
ஓவென்று
  கத்தின
காலிப்
  பானைகள்!
_வைதீஸ்வரன்

7.

யோனியில் பனித் துருவம்
உருக
  வைத்த பெருங்கனல்
உருகிய துருவம்
  
கிளைத்து நதி
  பெருக
புணர்வின் கரையெங்கும்
காமப் பூ தழைத்த
நாகக் காட்டில்
ஆதவனே
  பௌர்ணமி
ஆசையெல்லாம் நட்சத்திரங்கள்
       _தாரா  கணேசன்


8.

சொற்கள் மறைக்கப்பட்ட  பத்திரிக்கை
சொற்களை மறைத்து
வெளிவந்த
  பத்திரிகை
இடையில்
  கிழித்தெறியப் படுகிறது
பத்திரிகையின் மொழி ஊமையாக
கண்களற்றவர்
  வாசிக்கிறார்
ஊமைகளின்
  பத்திரிகை
வெளி வர
  மறுத்து  விடுகிறது
எடுத்துச் சென்றவனின் முகம்
பின் பக்கம்பதிந்திருக்க
வனங்கள் அழிந்த
  மணம்
முன்பக்கத்தில் பெருக்கெடுக்கிறது
பயங்கரக்
  கோடுகள் நிறைந்த
ஒரு
  பத்திரிக்கை
விடிய
  முடியாத  காலையில் 
வந்து என்னை
  எழுப்பிவிட்டு
வீடு
  துடிக்கிற  செய்திகளை
நிரப்பி
  விடுகிறது
_தீபச்செல்வன்(இலங்கை)
 

9. கிறுக்கன்

அவசரமாய்
  காலைக் கடனை
மாலையில்
  கழித்து
அவசரமாய்
  அள்ளித் தின்று
இருசக்கர
  வண்டியில்
மூன்றாவது சக்கரமாகி
இரவுதோறும் ஓடும் ஆலுவலன்
அவசரமாய்
  சொல்லிக்  கொண்டான்
“நான்
  பீட்டர்...நான் பீட்டர் “ என்று
அவசரமாய்
  பேசப் போகும்
பலரிடம் அவன்
ஆங்கிலம் பேசி குறை களைந்து கொண்டே
இருக்க
குறைகள்
இன்னும்....இன்னும்...
வேண்டும்
  இன்றும்

                           10.  கிளிக்குஞ்சு

பகலில்
  தூக்கத்திலும்
அவன்
இஅரவின் பச்சை நியான்
அமெரிக்க
  நெடுஞ்சாலையில்
நிலாமுகிழ்க்க
காண்கிறான்
வேண்டும்
வேண்டும்
வேண்டும்
      டும்
      டும்
தாளகதிக்கு
இறுகின கால்களுக்கிடையில்
நசுங்கிச்
  சுருங்குகிறது
கிளிக் குஞ்சு
_பெருந்தேவி


11.வெளிப்பாடு

இடத்தை
  சொல்லிவிட்டு
மறைந்து
  கொள்ளும்  குழந்தை
காணவில்லை என்று
  எங்கெல்லாமோ  தேடுவேன்
சுருள்தலையில் ஒரு பிரி உயர்ந்து
எட்டிப்பார்க்கும்.
ஒற்றைக் கண் பின் தொடர்ந்து
உளவு பார்த்துப்
  பதுங்கும்
வெளியில் முளைத்த கனவாய்
கதவைப்பற்றியிருக்கும்
பூவிரல்கள்
அடிக்கொரு தரம்
  கிளி மிழற்றும்
“என்னைத்
  தேடுகிறாய் தானே?” எனவும்
என்னைத்
  தானே  தேடுகிறாய்?”எனவும்
அனுதாபம்கொண்டோ
  ஆற்றமாட்டாமலோ
தனக்காயோ..எனக்காயோ
கள்ள வெள்ளமாய் பீறிட்டேகி எனை
அள்ளிக் கட்டிக் சிரிக்கும் கணம்
அறை நிறையும் உயிர்மணம்
வளர
  வளர 
மறைவிடங்களும் வளரும்
  தானே!!
   _ரிஷி’
                                
           
                         
12. அள்ள..அள்ள...

விரல்களைப்  பிரிக்கும் போதே
கைக்குள் இருந்தது
இலைகளை
  அசைப்பதற்கு  முந்திய  காற்று
மணலை அள்ளினேன்
கையில் காற்சுவடுகளுடன்
 
கரை
  இருந்தது
நீரை அள்ளினேன்
கையில் முடிவற்று
  நதி இருந்தது
அகண்டு
  கிடந்த ஆகாயத்தை
அள்ளிவிட்டு
உள்ளே
  தான்  இருக்கும் என்று
       _கல்யாண்ஜி


13.விதி

ஒரு
  ஓடையில் மீன் பிடிப்பதைப் பார்க்கிறேன்
வாயில் மாட்டிய
  முள்ளின் கூர்மையைப்  பற்றி
அதிகம் யோசிக்கிறேன்.
கசிந்த
  ரத்தத்தைக்  கண்ணுற்று 
ஒரு
  கழிவிரக்கத்தை  உருவாக்கிக்கொள்கிறேன்
அப்புறம்
  அதையே  பார்த்து மறந்து  விடுகிறேன்.
வழக்கம்
  போல்  சுய பச்சாத்தாபத்திற்குள்  செல்கிறேன்
என்
  கண்ணீரைப்  பற்றி அலசி  மாய்கிறேன்
உணவைத்
  தேடுவதின்  வழியில்  மூழ்கி  விடுகிறேன்.
முள்ளில்
  மாட்டியது  மீன் 
விதியென்று
  சொல்லி விடுகிறேன்
அது
  குழம்பானதை  ருசியைப்  பற்றிய விசயமாக
மாற்றுகிறேன்
என் தயிர் மத்தில்
  வெண்ணை வருவதை பற்றித்
தான்
  கவனமாக இருக்கிறேன்
சிதறிக் கிடக்கும் பூலோகங்களின்
 
மாபெரும்
  சோகங்களில்
நான்
  தலையிடுவதென்பது
என்
  வேலையில்லை யென்று நினைத்து  விட்டேன்
கருணையில்லாத என்னிடம்
 
சொற்களில் சொல்ல முனைதல்
பேதமை மிக்கது
 _அய்யப்ப மாதவன்  


14.  பாட்டாவின்  நதி

இந்த வழியாகத் தான்
  
எங்கள்
  பழைய நதி  ஓடியதாம்
முன்பு
ரொம்ப
  காலத்துக்கு  முன்பு
பெரிய
  நதி  அது
எங்கள்
  தாத்தா அதில் தான்
குளிப்பாராம்.
அவரோடு
  பெரிய யானையும்
அப்புறம்
  எப்படியோ 
நதி
  நின்று  போச்சாம்
அந்த இடமெல்லாம் மணலாச்சு
மணல் மேலே
  எங்கப்பா
வீடு
  கட்டிக் குடி வந்தார்,
இப்பக்
  கூட  
எங்க
  கொல்லைப்புறத்தைத் 
தோண்டிப் பாத்தால்
மீன் முட்கள் கிடைக்கின்றன
எங்கள் பெரிய நதியோட
நினைவாகத்
  தான்
நாங்கள்
சனிக்கிழமை
  தோறும்
குளிக்கிறதில்லே!
   _ஜெய மோகன் 


15.திருப்பம்

ஒரு
  வேர்க்கடலையின் உருவத்தில்
கடவுள் இருந்த போது
அதை
  நான்  தவற விட்டிருக்க வேண்டும்
அல்லது
  என்னைத்  துரத்தும் ஒரு நாயின்
வடிவத்தில் நெருங்கும்போது
கல்லெறிய
  ஓடியிருக்கவேண்டும்
அல்லது
  என் தாயின்  செவிப்பறை
நடுங்க அவளைத்
  திட்டிய போது
கடவுள்
  என்னை விட்டு விட்டு விலகிப் போயிருக்கலாம்
அல்லது
  ஒரு  பிச்சைக் காரனை
அலட்சியப் படுத்திய போது
 
ஒரு வேசியை
  இகழ்ச்சியாய்  நோக்கும்போது
கடவுள்
  என்னைக் கை விட்டிருக்கலாம்
எப்படியானாலும்
ஒரு குழந்தையின் சிறுநீர்ச் சூடு போல
என்னுள் மெதுவாய்ப் பரவிய கதகதப்பை
எங்ஙனம் நான் இழத்தல்
  கூடும்?
இனி ஒரு புல்லின்
  கூர்முனையும்
என்னல் மழுங்காதிருக்கட்டும்
குளிர் காலத்தில் என் வீட்டில்
  சமையலறையில் 
கரப்பான்கள் அடைய
 
இனி சம்மதிப்பேன்
ஏனெனில்
ஒரு குயவனோரம் உட்கார்ந்து
 
உற்று ரஸிக்கும் கடவுளை
என் பக்கம்
  திருப்ப  வேண்டும்
_யவனிகா  ஸ்ரீராம்

16.

உன் அடையாளங்கள்
என்ன
  என்று  கேட்டார்கள்
என்ன சொல்ல?
சுருட்டை
  முடியையா?
சுயநலத்தையா?
உயரமாய்
  வளர்ந்ததையா?
உடனிருந்து
  கெடுத்ததையா?
செந்நிறம் என்பதையா?
செய்நன்றி மறந்ததையா?
வசீகரச்
  சிரிப்பையா?
வக்கிர புத்தியையா?
எதைச்
  சொல்ல?
அகத்தின் அசிங்கம்
முகத்தில் தெரியுமா?
 _தங்கம் மூர்த்தி 


17.

 நம்புகிறேன்

ஆறு மாதத்  தம்பி தூக்கத்தில்  அழுகிறான்

ஏனென்று  கேட்கிறேன்  தூக்க்கத்தில்  சிரிக்கிறான்

ஏனென்று  கேட்கிறேன் ...கனவில் நரிகள்
மிரட்டுகின்றன. அழுகிறான். இந்திரன் செய்யும்
வேடிக்கைகள் கண்டு சிரிக்கிறான்
பாட்டியின் கதைகளை நம்புகிறேன்
அந்தியில் கூரை  மீது  கூடும்  காகங்கள்
இருட்டும்வரை  ஓயாமல்  கரைகின்றன
எதனாலென்று  கேட்கிறேன்
காகங்கள்  வாய்ப்பாடு ஒப்பிப்பதாய் 
தாத்தா சொல்லுகிறார்.  நம்புகிறேன்
அவ்வப்போது  அம்மா தீண்டாதவளாகி
ரேழித் திண்ணையில்  வசிப்பதேனென்கிறேன்
அம்மா கழுதையின் கழிவை  மிதித்து விட்டதனாலா
அப்பா  சொல்கிறார்.  .நம்புகிறேன்
அன்றொரு நாள்  அண்டம் குலுங்க இடி இடிக்க  
அச்சத்தில் நனைந்து போகிறேன்
அர்ச்சுனன் பெயரைச் சொல்லிக் கொண்டிரு
இடி மேலே விழாது துணிவூட்டும்
அம்மாவின் பேச்சை  நம்புகிறேன்
மயிலிறகு  புத்தகத்தில் பக்கங்களில்
குட்டி போட்டதால் கணக்குப்பிணக்கான
என்னிடம் சந்தோஷம் சொல்லுகிறான்
நம்புகிறேன்
விடலையில் உலகம் என்பது அழகிய பெண்களென்று 
யாரும் சொல்லாமலே நம்புகிறேன்
காளைப் பருவத்தில் என் வசதிகள கவனிக்கிறவளை
என்னை  நேசிப்பவளாக  நம்புகிறேன்
தன் நேர்மைக்கும் உழைப்புக்கும்
திறமைக்கும் அங்கீகாரம் தருபவனென்று 
முதலாளி சொல்லுகிறார் ,நம்புகிறேன்
என் கனவுகளை நனவாக்க எவனெவனோ
கட்சியை நடத்தி  ஆட்சியைப் பிடிப்பதாய்
அன்றாடம் சொல்லுகிறான்  நம்புகிறேன்
எல்லோரும் சொல்வதை  நம்பி 
எப்படி  ஆனேன் என்பதை மட்டும்
எனக்கு சொல்ல விருப்பமில்லை.

_லாவண்யா    
18.  பனை

அம்மாவின் ஒடிசலை

உன் மெலிந்த  தேகத்திலும்

பற்களை

மட்டையிலும்
அவளன்பை 
இள நொங்கினிலும்  வைத்திருக்கிறாய்
கனிவைப் பழத்திலும் 
செம்பட்டை  முடியை
உச்சியிலும்  உறுதியை
வைரத்திலும் வைத்திருக்கிறாய்
ஏர் முடிந்து
கூடி அருந்துகிற  வேளையில் உன்  ஓலையே
அம்மாவின் கைகளாக
மழைக்காலங்களில் 
முந்தானையாக
மேலாக
அம்மாவைப்போலவே
கருத்திருக்கிறாயே!
வறட்சியிலும் 
உயித்திருக்கிறாயே!
எல்லாவற்றிலும்  அம்மாவாக  இருக்கிறாய்
கருப்பும் கருப்புமற்ற
வெண்  பனைகளை  வாசலில் வளர்க்கிறேன்
கவனிப்பின்றிக் கிடக்கின்றாய்
அம்மாவைப் போலவே!
_யாழினி முனுசாமி        

19.

எங்கிருந்தோ 
அழைக்கிறாய்
  நீ
வேண்டுதலோ விருப்பமோ
கட்டளையோ
ஏதுமற்று
அது என் கதவைத் தட்டுகிறது
ஜன்னலில் எட்டிப் பார்க்கிறது
குறுகுறுப்பாய்
வீட்டை சுற்றி வந்து
வாசலில் படுக்கிறது
ஒரு
  நாய்க்குட்டியாய்.
சேமித்து வைத்த
பழஞ்சோகங்களை
அலுமினியத் தட்டில் வைக்கிறேன்
இளைப்பினூடே
  உணர்கிறது
என் புண்களை
  
உன் நினைவு
 
0
வாழ்வின்
  தூற்றலில்
காற்றின் திசையில்
பயணித்த
  உமியாக  நான்
மூட்டைக்குள்
  அடைபட்ட
நெல்லாக
  நீ      

_வெங்கட் தாயுமானவன்


{புற்று நோய் பாதிப்பால் தனது இறுதி 

நாளைமுன்கூட்டியே தெரிந்துகொண்டவன்.}











Go to your blog list





  _________________________________________________________