vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Wednesday, August 6, 2014

காதல் கவிதைகள் 8th century


Aug 6 at 9:14 PM
    காதல்  கவிதைகள்  8th  century
   அவளை...................................
        நினைத்த  கணமே
     
சூடு  பரவுகிறது  மேனியெல்லாம்
       
கண்ட  கணமே
     
பித்தாகிறது  சித்தமெல்லாம்........
       
எப்படிக்  கூறுகிறார்கள்
     
அவளை ஒரு  மெல்லியளால்  என்று?


அவஸ்தை

           
                                  
     நீ............
     இல்லாத  போது
      ஏங்குகிறேன்  உன்  அருகாமைக்காக!
      இருக்கும்போது
      அஞ்சுகிறேன்  இழந்துவிடுவேனோவென்று.
      அன்பே!
      நீ  இருந்தாலும்
      இல்லாவிட்டாலும்
      எனக்கு  வாய்ப்பது
      அவஸ்தை  ஒன்று  தான்


 A  political  Parody      

  கழுதைகளே!!  ஏன்  இப்படி  அழுக்கு  மூட்டைகளை  சுமந்து கொண்டு  அவலமாக  ஆற்றோரம் திரிகிறீர்கள்?
வாய்  திறக்காமல்  அரசாங்க  லாயத்துக்கு  செல்லுங்கள்!
அங்கே உளுந்தும்  கொள்ளுமாக  விருந்து  சாப்பாடு  கிடைக்கும்  உங்களுக்கு!
அங்குள்ள  அதிகாரிகளுக்கு  வாலுள்ளதெல்லாம்  அரசாங்கக்  குதிரைகள்  தான்!
அதிகாரிகள்  கூறுவதைத்தான் அரசனும் நம்பிக் கொண்டிருக் கிறான்
மற்றபடி  பாமர  மக்கள்  இவ்விஷயங்களில்  அக்கறையற்றி ருப்பதில் கவனமாக  இருக்கிறார்கள்....ஹஹ்ஹா...

                         காளிதாஸா
   



No comments:

Post a Comment