vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Friday, March 21, 2014


குஷ்வந்த் சிங்
வைதீஸ்வரன்


குஷ்வந்த் சிங் அவர்களைப் பற்றி நிறையவே எழுதப்பட்டிருக்கிறது பொன்கோவிலுக்குள் நுழைந்து சீக்கியர்களைத் தாக்கிய ராணுவ அத்து மீறலைக் கண்டித்து அவர் தன் பத்ம பூஷண் பட்டத்தை நிராகரித்தார்.சில வருஷங்களுக்குப் பிறகு அவருக்கு பத்மவிபூஷன் கிடைத்தது. மிகுந்த துணிச்சல்காரர பேச்சாளர். பிரபலமான எல்லோரைப் பற்றியும் அரசியல் வாதிகள் பற்றியும் மிக நெருக்கமான தகவல்களை தைரியமாக எழுதி மேலும் ஜனரஞ்சகமான அந்தஸ்தைப் பெற்றவர் . சில நல்ல நாவல்கள் எழுதியவர். பிரபலமான பத்திரிகை ஆசிரியர்.

நீண்ட ஆயுளுடன் வாழ்வது அவரது குடும்ப மரபணுவின் குணாம்சம் என்று நம்புவதாக சொல்லியிருக்கிறார். .தவிர சில வாழ்க்கை வழிமுறைக்ளும் அதற்கு உதவும் என்று சில தகவல்களை சொல்லி இருக்கிறார். காலையில் கொய்யாப்பழ ரஸம் அருந்த வேண்டும். மாலையில் ரெட் வொய்ன். கடவுள் பக்தி அவசியமில்லை. மனதை சூன்யமாக ஒரு பத்து நிமிஷம் வைத்திருக்க வேண்டும் அதை தியானம் என்று நீங்கள் சொல்லலாம்.பரவாயில்லை. பொறாமையும் பொட்டெரிச்சலும் கூடவே கூடாது. வயதை மறந்த ஹாஸ்ய உணர்வு கொண்ட நண்பர்களுடைய சகவாசம் மிக அவசியம் தவிர முதுமையில் வங்கியில் சொந்தமாக சம் பாதித்த பணம் கணிசமாக இருக்க வேண்டும் கவலையில்லாமல் இருப்பதாற்கு அது முக்கியம். தவிர சுத்தமாக மலச் சிக்கல் இல்லாமல் காலை விடிய வேண்டும் நோயற்ற வாழ்வுக்கு அதுவும் முக்கியம். தவிர சாவைப் பற்றி நினைக்க நேரமில்லாமல் வாழ்க்கையை ரஸிக்க வேண்டும்.

“என் சகோதரன் என்னை விட இரண்டொரு வயது இளையவன் அவன் என்ன விட அதிக ஆண்டுகள் இருப்பான் என்று தோன்றுகிறது. நான் அநேகமாக நூறைத் தொட்டு விடுவேன் . என் சமாதியில் மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன எழுதுவார்களோ..சம்சயமாக இருக்கிறது.. எச்சரிக்கையாக என் சமாதியில் பொறிக்கப் பட வேண்டிய வாசகங்களை நானே இப்போது எழுதி வைத்து விட்டேன் பார்த்துக் கொள்ளுங்கள்......”
Words on my obituary
--------------------------------------

HERE LIES ONE WHO SPARED NEITHER GOD NOR MAN
WASTE NOT YOUR TEARS ON HIM; HE WAS A SOD
WRITING NASTY THING HE REGARDED AS GREAT FUN
THANK THE LORD HE DIED; THIS SON OF A GUN


KUSHVANT SINGH

No comments:

Post a Comment