vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Friday, October 3, 2014

.....பிடித்தவற்றுள்......கவிதை


             
.....பிடித்தவற்றுள்......கவிதை



அம்மாவைத்  தொட்டு
           
அம்மா!
எனக்கு  ஆட்டோ வரும் முன்பே
உனக்கு
பேருந்து வந்து  விடுகிறதே!
அம்மாஒவ்வொரு  நாளும்
பள்ளியிலிருந்து  வீடு திரும்புகையில்
யாருமே  இல்லாத  வீட்டைப்  பார்க்கையில்
எதுவுமே
இல்லாதது  போல் தோன்றுகிறது  எனக்கு.
இரவு ஒன்பது  மணிக்குள்
எப்படியும்  வந்து  விடும்
உன்னையும்
பதினோரு  மணிக்குள்
வந்து விட முயற்சிக்கும் அப்பாவையும்
பள்ளிக்கூடத்தில் நினைக்கையில்
மங்கலாய்த்  தான்
ஞாபகம் வருகிறது.
இப்போதெல்லாம்
டாம் ஜெர்ரியும்
போகோ  டீவீயும்  புளித்து விட்ட்து.
F
ரிட்ஜுக்குள்  ஸ்னாக்கும்
செல் போனில்  உன் குரலும்
அலுத்து விட்ட்து
வரவேற்பறையை
அலங்கரிக்கத்  தெரிந்த உனக்கு
உன்  ஸ்பரிசங்களுக்கு ஏங்கும்
என்னை  ஏனம்மா புரிந்து கொள்ள
இயலவில்லை
வீட்டு  வேலைகளை
ஞாயிற்றுக்  கிழமைகளுக்குத்
தள்ளிப் போடும்
உன்னைப்  போலவே
ஏக்கங்களைத்  தள்ளிப் போட
எனக்கும்  தெரிந்து  விட்டது
அன்பான  வார்த்தைகளால்
தற்காலிகத்  தாயாராகிவிடும்
வேலைக்கார  ஆயா.....
அப்போதெல்லாம்  தோன்றுகிறது  எனக்கு
அவளுக்கே  நான்  பிள்ளையாகப் இருக்கலாமோ!
உன் பிள்ளையென
உணர்த்த நான்
நன்றாகப் படிப்பதாய்
மார்  தட்டுகிறாய்..
என்  அம்மாவென  உணர்த்த
என்ன  செய்யப்  போகிறாய்  நீ???







      சூர்ய பிரகாஷ்.






0



No comments:

Post a Comment