vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Friday, October 17, 2014

முள்


  முள்

-வைதீஸ்வரன்



பச்சைத்  தழலாக
இலைகள்............
இளங்காலை  வெளியில்.
கிளையில்  காக்கை 
தன்னையே  கொத்திக்  கொள்ளுகிறது
சுயவிமரிசனம்  போல்.

கரையெல்லாம்
கண்ணீர்த்  துளியுடன்
குழந்தைப்  பூக்கள்
ஆதவனின்  வருடலுக்கு  ஏங்கியவாறு.

வேதனைக்கும்  வாழ்வுக்கும்
வித்தியாசம்  குறைந்து
மனம்  குழம்புகிறது
துதிப்பதா  தூற்றுவதா...
என  நிகழும் பல
மனித வினோதங்களால்  மருண்டு.
.

வாசலெங்கும்
வாய்திறந்த கழிவு நீர்ப் பதுக்கங்கள்
மனிதப்  பேதைகள் முத்துக்  குளிப்பதற்காக

நடையும்  தாண்டலும் 
தப்பிப்புமாக  அன்றாட  வாழ்க்கை.

தைத்த  இடந்தெரியாமல்
பாதமெங்கும்  முள்ளைத்  தேடி
கழிகின்றன  என்  நேரம்
பாதையில்  முள்ளை  வீசியவனை
வானத்தில்  தேடியவாறு.

No comments:

Post a Comment