vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Monday, June 20, 2016

(கசங்கிய டைரிக்குள் கண்டெடுத்த ஒரு கவிதை 1959) கடலுக்கு சில வார்த்தைகள்

(கசங்கிய  டைரிக்குள்  கண்டெடுத்த  ஒரு  கவிதை  1959)

கடலுக்கு சில   வார்த்தைகள்
 
வைதீஸ்வரன்


                யுகயுகமாய் முதிர்ந்து
                நரைத்த வெள்ளக் கூந்தல் 
                 பூமித் தரையில்  அலைபாய
                ஆழ் மனதில் திமிங்கல சிந்தனைகளை
                தூங்க வைத்து
                நட்ட நடு வெளியில் 
                ஊழிக்காலம்  தவமிருக்கும்
                தற்பரமே  --நீ வாழ்க.

                 அகன்ற  நெஞ்சு நிறைய
                 வான் முழுதும் உள்வாங்கி
                 தன் மீன்கள் விண்மீன்களுடன்
                 கலந்து  விளையாட
                  எல்லையறற  கருணையால்
                 உயிரைப் போர்த்திக்  காக்கும்
                நீலப் பேரழகே   -- நீ வாழ்க

                ஊழிக் காலமாய்
                ஓய்ச்சலின்றி
                 வாழ்வுப் பொருளை
               உலகக் காதுகளில்  ஓதி ஓதி
               எதிரொலித்தும்
               மொழி பேதத்தால் 
               அது பேரிரைச்சலாகப் படும்
               உலகப் பேதமையால் உள்ளம் குமுறியும்
               பொறுமையாய் புவியை அடைகாத்து நிற்கும்
               ஆகாயப் பறவையே  
                நீ அன்புடன் வாழ்க  !




No comments:

Post a Comment