vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Thursday, May 18, 2017

நப்பாசை ---------- வைதீஸ்வரன்

                                                               நப்பாசை
----------
வைதீஸ்வரன்
 

     சாவதற்கு எனக்கு 
    பயமில்லாவிட்டாலும் 
    வருத்தமாக இருக்கிறது..

    புலன்கள் ஐந்தைக் கொடுத்து  ஒரு
    புல்லரிக்கும் உலகத்தை  என்முன்
   நிரந்தரம் போல் காட்சியாக்கிப் பின்
   என்னை நீக்கி விடக் காத்திருக்கும்
   கடவுளிடம் எனக்கு கோபம்;
   தடுக்க நினைத்தாலும் வருகிறது
         
    ஒரு வேளை ஆறுக்கும் மேல் ஏழாவது
    அறிவொன்றை கொடுக்க மாட்டானா;
    அவன் ?

    அதனால்....இறந்தாலும் 
    எட்டாத எழில் உலகம் இன்னொன்றை
    எனக்கே சொந்தமாய்  படைத்துக் கொண்டு 
    ''அவன் ' தொந்தரவின்றி 
    அந்தரத்தில் வாழ்ந்திருக்கலாமே
    ஆயுள் கணக்கில்லாமல்!



No comments:

Post a Comment