vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Saturday, January 10, 2015

கவிதைகள் _ சொல்ல நினைத்தேன்(இரண்டு) , விழித்த போது

 கவிதைகள்

      சொல்ல நினைத்தேன் [இரண்டு] 



இன்றைய  வெளிச்சத்தில்

இசைந்து
  வாழ்

நாளை
 என்பது கற்பனை இருட்டு

நினைத்து
  மருகுவது  பேதமை

இரண்டையும்
  இயக்குவது

ஏதோ
  ஒரு  உண்மை

இன்னதென்று
  புரியாத

எண்ணங்களின்
  இயலாமை

* * *
 விழித்த  போது

             இரவின் மிச்சம்  இன்னும்  

இருக்கிறது


  காற்று  இன்னும்  தோட்டத்தைத் 

  வருடுகிறது.

  இளங்காலை  இலைகளில்

  பளபளத்து  வழிகிறது;

  குஞ்சுக் கதிரின்  மழலை ஈரம்.

  நெஞ்சுக்குள்  பஞ்சுப்பூவைப் 

போல்

        ஒரு  புதுச்  சொல்.



         * * *

வைதீஸ்வரன்

No comments:

Post a Comment