vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Wednesday, February 3, 2016

பாந்தவ்யம்


பாந்தவ்யம் 


வைதீஸ்வரன்

[அமுதசுரபி  தீபாவளி  மலர் 15]
      




ரங்களைப் பற்றி யோசிக்கவே கிளுகிளுப்பாக இருக்கிறது. 
சின்னவயதில் ஏதாவது  கற்பனையாக யோசிப்பதற்கே  
மரங்களின் மேல் தான் உட்கார்ந்துகொள்வேன். 

ங்கள்  வீட்டு  வாசலில்  பரந்து வளர்ந்திருந்த  பாதாமி மரத்தின் 
பசுமையான கிளைகள் தான்  எனக்கு  குட்டி சிம்மாசனம்.  
அதில் ஏறி  உட்கார்ந்துகொண்டு மனதுக்குள்  மன்னனாகவும், குதிரைவீரனாகவும் நினைத்துக்கொண்டு 
சுற்றித் தாவி ஓடும் அணில்களையும் அரணைகளையும் 
அரசாட்சி செய்துகொண்டிருப்பேன். 


ன் சிம்மாசனத்தை அவ்வப்போது சாமரமாக லேசாக  ஊஞ்ச
லாட்டிமரம் என்னை உற்சாகப்படுத்தும். மனதுக்குள்என்னென்
னெவோகற்பனைக் கதைகளும் இசையின் துள்ளல்களும் ததும்பி 
பரவசம்  கூட்டும். 

சிறகடித்து மிதக்கும் பல விசித்திர தேவதைகளின் ஊர்வலம் நகர்ந்து 
கொண்டிருக்கும் என்னையே மறந்து  நான்  வெவ்வேறு பாத்திரங்க
ளாக மாறி  மரத்தோடு முளைத்த ஓரங்கமாக  மாறிவிடுவேன். 

வ்வொரு முறையும் என்னை ஓயாமல் கத்தியழைத்த என் 
அம்மாவின் கூச்சலால்தான் நான் கற்பனை கலைந்து  மீண்டும் 
நானாகி  மரத்திலிருந்து  இறங்கி  பூமிக்கு  வருவேன்!

 ந்த மரம்  எனக்குள்  ஒரு  தாயாக  இன்னும்  நினைவில் ஒட்டிக்
கொண்டிடிருக்கிறது. ஒரு முறை  என் வீட்டில்  ஏதோ விசேஷத்
திற்காக நிறைய உறவுக்கார்கள்  வந்திருந்தார்கள் 

விசேஷத்தின் விளைவாக ஏகப்பட்ட  கூச்சல்  புகை  நெடி.இடம்  
நிறைந்த நெருக்கடி!   ஹோம குண்டத்தின்  புகையைத்  தாங்கிக்  
கொள்ள முடியாமல், யாரும் கவனிக்காத சமயம் நான் மரத்தில்  
ஏறி  உட்கார்ந்துகொண்டுவிட்டேன்.

சிறிது  நேரம் கழித்து  என்னை  எதற்கோ  தேடிக் கொண்டிருந்த  என்  
பெரியப்பா  மரத்தின் மேல் நான் உட்கார்ந்திருப்பதைப்  பார்த்தார். 
என்னைப் பார்த்த கணம் அவர்  முகம்  ஏதோ கலவரமாக  மாறியது. 

டேய்..கண்ணா...எப்ப்டீடா மரத்துமேலே ஏறினேசரி..நீ கொஞ்ச
நேரம் அசையாம கையை காலைஆட்டாம இருக்கமுடியுமா? நீ 
அசையாம பொம்மை மாதிரி இருந்தா நான் ஒனக்கு சாக்கலேட்டுக்
கொடுப்பேன்! சரியா?..அசையாம இரு..  என்றரர்.

  னக்கு சாக்கலேட்டு  பிரியம்.  நான்  சரி பெரியப்பா..  என்றேன்.

 வர் அங்கே தரையில் கிடந்த நீளமான கழியை எடுத்து மேலே  
என்அருகில் மெதுவாக உயர்த்தி  திடீரென்று பக்கவாட்டில் பலமாக  ஆட்டினார். ஒரு நீளமான  பழுப்பு நிறப் பாம்பு  என்  அருகிலிருந்த  கிளையிலிருந்துவிடுபட்டு தரையில் விழுந்து நெளிந்தது. 

டுத்த கணம் பெரியப்பா  அதன்  தலையில் ஒரு  போடு  போட்டார். 
தன் மண்டை சிதறி  ரத்தம்  லேசாக  கசிந்து கொண்டிருந்தது.

 “டேய்..கண்ணா..பாத்தியா..எவ்வளவு பெரிய பாம்பு!....நல்ல
வேளை மெதுவா இறங்கி வாடா....பயப்படாதே!  மெதுவா.....
மெதுவா...” என்றார்.

 ன் காலருகில் இதுவரை என்னைத்தொந்தரவு செய்யாமல் சாது
வாகத் தொங்கிக்கொண்டிருந்த அந்தப் பாம்பு அரைக்கணத்தில் ஆபத்
தானதாக மாறி என் பெரியப்பாவின்  தடிக்கு  இரையாகிவிட்டது. ன்  இப்படி  நேரவேண்டும். வேண்டும்வருத்தமாக  இருந்தது. 

ந்த நிகழ்ச்சியால் எனக்கு இன்னொரு சங்கடமும் நேர்ந்தது. 
அதற்குப் பிறகு நான் மரத்தில் ஏறக்கூடாது என்று கண்டிப்பாக
என் அம்மா அதட்டினாள். 

மீறி  ஏறினால் காலை உடைத்துவிடுவதாக அப்பா மிரட்டினார். 

னால் என்னால் மரம் ஏறாமல் இருக்கமுடியாது. அது என்
பொழுதுபோக்குக்கு பெரிய இழப்பு. மரத்தின்  கிளைகளில் 
கொஞ்சநேரமாகவாவது ஆடாமல் இருந்தால் எனக்கு செத்தது
போல்  இருக்கும். ஏதோஒரு தோழனை விரோதித்துக்கொண்
டதுபோல் தோன்றும். மரத்தின்மேல் பாம்பு இருந்ததற்காக 
மரத்தை எப்படி வெறுத்து  ஒதுக்க முடியும்? .   

 வீட்டில்  பெற்றோர்கள்  இல்லாத  சமயம்  மெதுவாக  மீண்டும்  
நான்  பாதாமி மரத்தின்  மேல்ஏறிக்  கொண்டேன். 

யாருமில்லாத இந்த சமயத்தில் ஆசைதீரக்  கிளைகளில் ஆடித் 
தீர்க்கவேண்டுமென்று ஆசைப்பட்டேன். ஆனால் என் கெட்ட
வேளை என் அம்மா வந்து விட்டாள்.  

நான்  வீட்டுக்குள்  இல்லாததைக் கண்டது  நேராக  வாசலுக்கு 
வந்து மரக் கிளையில் என்னைக்  கண்டு பிடித்துவிட்டாள்.

ம்மாவுக்கு  கடுமையான  கோபம்.

று நாள்  அப்பாவின்  ஏற்பாட்டில்  இரண்டு  மூன்று  ஆட்கள் கோடாரியைத் தூக்கிக் கொண்டு  மரத்தை  வெட்ட  வந்து விட்டார்
கள்.

னக்கு   சொல்ல  முடியாத  அதிர்ச்சி.  நான்  “அப்பா...அப்பா..”  
என்று கத்தி கூப்பாடு  போட்டு  அழுதேன்.  தரையில்  புரண்டேன். 

யவு  செஞ்சி  மரத்தை  வெட்டாதீங்க அப்பா!  மரத்துக்கு என்னப்பா தெரியும் அதுக்கு  பாம்பு  ஏறினாலும்  பல்லி  ஏறினாலும்  எது ஏறினா
லும்  எல்லாமே ஒண்ணு தான்...  தப்பு  செஞ்சது  நான்  தான்.. இனிமே சத்தியமா  ஏற மாட்டெம்ப்பா...மன்னிச்சுடுங்க  மரத்தை விட்டுடுங்கோ!  “  என்று  கதறினேன் .

  ப்பாவுக்கு மனம்  இளகியது.  அம்மாவுக்கும்  கண்ணில்  ஈரம்  துளிர்த்தது !

 “பாவம் கொழந்தை..இனிமே  ஏற  மாட்டான்!.. வெய்யக்  காலத்துல 
நல்ல நிழலா குளுகுளுன்னு இருக்கு. அதை  வெட்டுவானேன்!என்
றாள் அம்மா.அப்பாவுக்கு அது சந்தோஷமாக இருந்திருக்கவேண்டும்.

ரு  மரம்  நம்  வீட்டோட  பல  வருஷங்கள்  சேர்ந்து  வளரும்போது  அதுவும்  அநேகமா நம்ப பிள்ளையைப்  போலவே ஆயிடுது. பாசமா குளிர்ச்சியா அரவணைப்பாகி  விடுகிறது.. எல்லா சமயத்திலேயும் 
ஒரு  உயிர்  இன்னொரு உயிருக்கு  ஆபத்தாக  விரோதமாகி   விடுவ தில்லை. 

யற்கையில்  யாருக்கும் எதற்கும்  உட்பகையில்லை. அது  ஒரு  தற்
செயலான வருந்தத்தக்க விபத்துதான். அதற்கு தெரிந்தும் தெரியாமலும் 
எவ்வளவோ  காரணங்கள்  இருக்கலாம். 


 ல வருஷங்களுக்குப் பிறகு தொழிலும் சூழலும் மாறிப்போய் 
நான் பிரிந்துபோன என் சொந்தஊருக்கு  மீண்டும் போனேன். 

நான்  பிறந்து  வளர்ந்த  வீடு  இப்போது  கைகள்  மாறி  அடுக்கு மாடிக் கட்டிடமாக வளர்ந்து அடையாளம் தொலைந்து போயிருந்தது. 

னால் அதிசயமாக என் இளவயது மரம்  மட்டும்  சற்றுப்  பழுப்
பேறிய கிளைகளுடன்  சற்று  தளர்ச்சியாகி சோகையாகி  நீண்டு  மெலிந்து அங்கேஇன்னும்  பிடிவாதமாக   நின்றுகொண்டிருந்தது.

னக்காகத்தான் காத்துக்கொண்டிருந்ததுபோல் அது தன் மெலிந்த கிளைகளை லேசாக இங்குமங்கும் ஆட்டி சந்தோஷத்தைதெரிவித்
துக்கொண்டது.

  ப்படித்  தான் எனக்குத் தோன்றியது!





Ø      

No comments:

Post a Comment