vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Saturday, May 14, 2016

நினைவுக்கு வந்த தற்காலக் கவிதை!!

 நினைவுக்கு  வந்த  தற்காலக்  கவிதை!!
-----------------------------------------------------      

    வைதீஸ்வரன் 1964 



வீட்டுக்கு  வீடு  வந்து 
ஓட்டுக்  கேட்ட போது
வேடிக்கை யென்றிருந்தேன்
போட்டோவில்  கள்ளமற்ற
புன்சிரிப்பைப்  பார்த்தபோது
சிரிக்கட்டும்  என்று  விட்டேன்
இன்று
சாக்கடை நீர் வழிந்து
வீட்டுக்குள்  வந்த பின் தான்
வாக்கிழந்த மடையன்
நானே தான் என்றறிந்தேன்!!




No comments:

Post a Comment