vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Sunday, May 12, 2019



 ஒரு கவிதை


- வைதீஸ்வரன்- 


உயிரின் அர்த்தம்


ஒரு பூ பூத்துக் குலுங்கி மலர்ந்து
மடிவதைத் தவிர வேறு என்ன சாதிக்கிறது?

ஆனாலும் அதன் மொத்த இயக்கமுமே
நம் உலகத்தை எத்தனை செழிப்பாக்குகிறது?
அழகாக்குகிறதுவாசனையாக்குகிறது!!
முழுமையாக்குகிறது!

மலரற்ற உலகத்தின் வறட்சியை
கற்பனை செய்ய இயலுமா?

ஆனாலும் இவையெல்லாம்
ஒரு பூவின் வாழ்வு நோக்கமாக
இருந்ததாக சொல்ல முடியுமா?

அதே சமயம் ஒரு பூவின் படைப்பு மூலம்
இவ்வளவு பேரனுபவத்தை சாத்தியமாக்கிய
காரணமற்ற உயிர்சக்தியை நாம் உணர்ந்து
நெகிழ்ந்து கொள்ளாமல் இருக்க இயலுமா?


*****

இவ்விதம் இயற்கையின் ஒவ்வொரு படைப்பும்
நிறைவாக வாழுகின்றன.
மனிதன் மட்டும் தான் ஏதோ உலகத்தை
உய்விக்க வந்தவனைப் போல் மார்தட்டிக் கொண்டு
வாழ்ந்து முடிகிறான்!!!

_______________________________________________________________________________

No comments:

Post a Comment