vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Sunday, June 7, 2015

முடிவாக ஒரு வார்த்தை

முடிவாக ஒரு  வார்த்தை

வைதீஸ்வரன்


 

 நான் வேலையிலிருந்து களைப் புடன் உள்ளே நுழைந்தேன்.

நான் வருவதை அம்மா கவலை யுடன் பார்த்துக் கொண்டிருந் தாள்.

 நான் "என்ன?“ என்பது போல் அவள் முகத்தைப் பார்த்தேன் அவள் கட்டிலில் படுத்திருந்த அப்பாவைக் காட்டினாள்.

எப்படி இருக்கே அப்பா?   சட் டையைக் கழட்டிக் கொண்டே கேட்டேன்.

அப்பா அரை மயக்கத்திலிருந் தார்.  போர்வையும் படுக்கையும் கலைந்து அலங்கோலமாக இருந்தது. அவர் மெள்ள தலையைத் திருப்பி குரல் வந்த  திசையைப் பார்த்தார்.

“ நீ வந்துட்டியா?”

நா குழறிய குரலில் ஒரு சின்ன சந்தோஷம் தொனித்தது.  அம்மா மெது வான குரலில் சொன்னர்.

இதோட ஆறெழு தரம் சிறு நீர் கழிச்சுட்டார்..

நான் கவலையுடன் அப்பாவைப் பார்த்தேன்  அவர் அருகில் மேஜையில் வைத்திருந்த மாத்திரைகளைப் பார்த்தேன். இன்னும் ஒரு நாளைக்கு தேவையான மாத்திரைகள் இருந்தன.டாக்டர் நாளைக்குத் தான் வரச் சொல்லியிருந்தார்.

 கடந்த ஆறு மாத காலமாக இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அப் பாவை ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டியிருந்தது. அவருக்கு சிறுநீர கக்கோளாறு காரணமாக ரத்தத்திலுள்ள அவசியமான தாது வஸ்துக் களெல்லாம்  சிறுநீர் மூலமாக வெளியேறிக்  கொண்டிருந்தன. ஆபத் தான நிலைக்குப்  போய் விடுவார்.

ஆஸ்பத்திரிக்குப்போய் இரண்டு மூன்று நாட்களுக்கு  நாலைந்து பாட் டில்கள் ஊட்டத்தை செலுத்தினால் தான்   ஓரளவு நிலைமை சீராகி  வீட்டிற்கு வருவோம்.  ஆனால் இரண்டு வாரங்களுக்குள் உடம்பு சோகை பிடித்து பழைய கதிக்குத் திரும்பி விடும்.

"இது தற்காலிக வைத்தியம் தான்... வயதாகி விட்டது...   பார்த் துக் கொள்ளுங்கள்...””   என்றார் டாக்டர் எச்சரிக்கையுடன்

 அப்பா தலையை மெள்ள என் பக்கம் திருப்பினார்.

 "இன்னிக்குத் தானே போகணும்...?” 

இன்னிக்கு இல்லேப்பா..நாளைக்குத் தான் டாக்டர் வரச் சொல்லியிருக்கார்....

 “அப்போ...இன்னிக்கு இல்லையா?...”

இன்னும் ஒரு நாளைக்கு மாத்திரை இருக்கே!அதுமுடிந்தபின் நாளைக் குப் போகலாமே...

என் பதில் அப்பாவுக்கு   ஏமாற்றமாக இருந்தது. மெதுவாக இரண்டு முறை பெருமூச்சு விட்டுக் கொண்டார்.  நான்  உடை மாற்றிக் கொள்ள உள்ளே போனேன்.

அப்போ இன்னிக்கு இல்லையா?... இன்னிக்கே போ..க. லா..மே...

 அவர் குரல் என் பதிலை எதிர்பார்க்காமல் தொய்வுடன்  தனக் குள்ளே  முனகலுடன்  முடிந்தது.

 எனக்கு அவர் வேதனையை  உணர முடிந்தது.  இதை கவனித் துக் கொண்டிருந்த  அம்மா அப்பாவுக்கு என்ன பண்றதோ தெரியலே... அவருக் கு இன்னிக்கே டாக்டரைப் பாக்கணும்னு இருக்கு . ..” என் று எதிர்பார்ப்புடன் என்  முகத்தைப் பார்த்தாள்.

 சிறிது தயக்கத்துக்குப் பிறகு நான் சட்டையைப் போட்டுக் கொண்டு வெளியே கிளம்பினேன்.

எங்கள் வீட்டுக்கு சிறிது தூரத்தில் தான் நகரத்தின்  பிரதான சாலை இருந்தது.  ஆட்டோக்கள் கிடைப்பது அவ்வளவு ஒன்றும்சிரமம் அல்ல.

கடந்த சில மாதங்களாக ஓயாமல் தொந்தரவுபடுத்தும்  அப்பாவின்டல் நிலையும் தீர்வு இல்லாத வைத்தியங்களும் எனக்குள் நிவர் த்தி யில்லாத   துக்கத்தையும்  சலிப்பையும் ஏற்படுத்தி யிருந்தன.

அப்பாவைப் பற்றி அப்படிப்பட்ட  சலிப்பு ஏற்பட்டு விடக் கூடாதெ ன்று எனக்குள் எவ்வளவோ எச்சரிக்கை செய்து கொண்டேன்.

அப்பா  சமீபகாலம்வரை ஆரோக்கியத்துடன்  இருந்தவர்.  சொல்லப் போ னால் என்னை விட  உடல் தெம்புடன் இருந்தவர்.  இர ண்டு வரு டங்களுக்கு முன்பு கூட தீராத  ஆஸ்துமா  வேதனை யில் நான் தவித்த போது  மழை கொட்டும் ராத்திரியில் வெளியே நனைந்து கொண்டு நடந்து போய்  டாக்டரை அழைத்து வந்து  ஊசிபோடச் செய்து  மூச்சுத் திணறலை  ஆறுதல்படுத்தி னார். அவருக்குவயதாகி உடல்நலம் இப்ப டிக்  கெட்டுப் போகு மென்று  நான்  எண்ணிப் பார்த்ததேயில்லை

பிரதான சாலை  ஒரு ஆட்டோ கூட இல்லாமல் விரிச்சோடிக் கிடந் தது. வித்யாசமாக பத்தடிக்கு ஒரு போலீஸ்காரராக சாலை யின் இருபக்கமும் காவல் காரர்கள் நின்றுகொண்டிருந்தார்கள்.

சாலையின் விளக்குக் கம்பங்களில் குறுக்குமறுக்காக கட்சிக் கொடிகள் எந்த அக்கறையுமற்று ஊஞ்சலாடிக் கொண்டிருந்தன.

மெதுவாக ஒரு காவல்காரரரை நெருங்கி   "இன்னிக்கு என்ன ஸார் விசே ஷம்?..”  என்று கேட்டேன்.

இது தெரியாதா?.. பேபர்லே எல்லாம் வந்திருக்கே! இந்தத் தெரு முனையிலே இருக்கற பெரிய ஆஸ்பத்திரியை  பிரதமர் வந்து தொறக் கறாரே... முதல் மந்திரி எல்லாம்  வரப் போறாங் களே!.....

 “அப்போ...

இன்னும் ரெண்டு அவருக்கு இந்த ரோடு க்ளோஸ்...

 நான்  உதவியற்று  சாலையின் வெறுமையைப் பார்த்து  விட்டு நடந்தேன்.

 வீட்டுக்குள் நுழைந்து சட்டையை கழட்டினேன். நான் வருவதை எதிர்பார்த்துக் கொண்டிருந்த மாதிரி  தலையைத்  தூக்கினார் அப்பா.

இன்னிக்குப் போக முடியாதுப்பா...

 “ என்னாச்சு? “ 

பிரதம மந்திரி இந்தவழியா போறாராம். அதனாலெ ட்ராபிக்கை எல் லாம் நிறுத்தி வச்சிருக்கான்.  இப்போ போகலைன்னா  டாக் டரை நாளைக்குத் தான் பாக்க  முடியும்.  

அப்பா  இரண்டு மூன்று தரம் புரண்டு படுத்தார் .பெருமூச்சு விட்டார்.

பிரதம மந்திரி ஒரு ஓரமா போனா...நாம்ப ஒரு ஓரமா போக முடியாதா?”

 அப்பாவைப் பார்த்து நான் சிரித்தேன். அவர் இதை விளையாட்டாக சொன்னதாக தெரியவில்லை.   அவர் கேட்டது ஒரு வகையில் நியாய மாக யதார்த்தமாகக் கூட இருந்தது. 

மேஜையில் குடிக்கப்படாமல் இருந்த ஜூஸை .அவர் வாயில் மெள்ள  ஊற்றி   மீதி இருந்த மாத்திரைகளைப் போட்டேன் . போர்த்தி விட் டேன். 

கொஞ்சம் பொறுத்துக்கோங்கோப்பா.....நாளைக்கு போயிடலாம்... ஏற்கனவே நாளைக்குத் தான் டாக்டர்  அப்பாய்ண்ட்மெண்ட்  கொடுத் திருக்கார்..

நான் மெதுவாக என் அறைக்குள் போய்க் கொண்டிருந்தேன்.

ஏம்ப்பா..பிரதமர் ஜனங்களோட சேத்தியில்லையா?..அவர் வர்ரார்னா ஜனங்களை இப்படிவிரட்டி அடிக்கணுமா?.. எம்மாதிரி பிராணாவஸ்தை பட்றவ...னெ..ல்லாம்...... வார்த்தை வரா மல்    துக்கம்  தொண்டையை அடைத்து    ஏதோ முணுமுணுப் பாக முடிந்தது.  ..

அவர் முணுமுணுப்பு ஒரு தனி மனிதனின் முணுமுணுப்பாக தொனிக் காமல்இதுமாதிரி வேதனைக்குள்ளாகிக்கொண்டிருக்கும் எத்தனையோ பாமர மக்களின்  குரலாக ஒலித்தது.
   


* * *

 மறு நாள் அப்பாவை டாக்டரிடம் கூட்டிக் கொண்டு போனேன்.

நிலைமை நிஜமாகவே கவலைக்கிடமாகிவிட்டது. அப்பா பெரி தாக மூச்சுவிட்டுக்கொண்டிருந்தார். நிலைமையை  பார்த்து அறிந்து கொண்ட  நர்ஸ் ஓடிப்போய்  டாக்டரை  அவசரமாக வெளியே அழைத்து வந்தார்.

 டாக்டர்  அப்பாவின் நாடியைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு
 “அய்யய்யோ...” என்றார், தனக்கு மட்டும் சொல்லிக்கொண்ட மாதிரி.

நேற்றே வந்திருக்க வேண்டும் டாக்டர்...  .வரமுடியாமல் போய் விட்டது....”  என்றேன்  கவலையுடன்

 "அடடா..... நேற்று  வந்திருந்தா நல்லா இருந்திருக்குமே!   .....ஏன் இப்படி தாமதப் படுத்தினீங்க? .  என்னா ஆச்சு?””””

அது  வந்து..   ரோட்லே ....”  நான் சொல்ல வாயெடுத்தேன்.
அதற்குள் அப்பாவின் கையும்  தலையும்  வேகமாக அசைந்தது. 

 பேச்சு வராமல்   மூச்சு  தொண்டையில் சிக்கிக்கொண்டு உயிரின் இரைச்சலுடன் இழுத்துக்கொண்டிருந்தது ..

 அப்பா  நடுங்கிய விரல்களை அந்தரத்தில் யாரையோ சுட்டிக் காட்டியவாறு  அவர் சொன்ன அந்த முடிவான  வார்த்தை.....

பி...ர....தழ்..  ம்ம ….. ர்..













Monday, May 4, 2015

தோன்றியது...

தோன்றியது...

வைதீஸ்வரன்


கந்தசாமி  சற்று  கவ லையாக  இருந்தார்.  அவர்  வியாபாரம்  சுமாராக  நடந்தாலும் பெரிய  முயற்சிகளில்  அவருக்குப்  பலன்  கிட்டவில்லை. இது  பற்றி  அவர் நண்பனி டம்  யோசனை  கேட் டார். நண்பர்  சொன் னார்.

எனக்குத்  தெரிந்தவர்... சித்தர்  மாதிரி ஒருவர்  இருக்கிறார்..... அவரு டைய  சொல்   சரியாக  இருப்பதாக  பலர்  சொல்லுகிறார் கள்... நீ  ஏன்  அவரிடம் ஆலோசனை  கேட்கக்  கூடாது?”.

கந்தசாமிக்கு  அது  சரியென்று  தோன்றியது.  அந்தப்  பெரியவரிடம்  பவ்யமாக  போய்  நின்று  அவரிடம்  பழத் தட்டில் ஒரு  பெரிய  தொகையை  வைத்து   விட்டுப் பலன்  கேட்டார்..  அவர்  சொன்ன  பலன் மிகவும்  நம்பிக்கை  ஊட்டுவதாக  சந்தோஷமாக  இருந்தது.   இன்னும்  இரண் டொரு  மாதங்களில்  மிகப்பெரிய  ஆதாயம்  கிடைக்கும் என்று  சொல்லியிருந்தார்.

 கந்தசாமி  பழையபடி  உற்சாகமாக  வியாபாரத்தை  நடத்தி 

னார். குலுக்கலில்  ஒரு  பெரிய  தொகை  கிடைக்கப்  போவ 

தாக  சொல்லியிருந்தார்.  வியாபாரம்  ஏறுமுகமாகப்  

போகும்  என்று  சொல்லியிருந்தார்.  .இரண்டு  மாதங்க 

ளுக்கு  மேலாகவே  கடந்து  போய்  விட்டது.

சித்தர்  வாக்குப் படி  எதுவும்  பெரிய  லாபமோ  அதிர்ஷ் டமோ  வாய்க்கவில்லை.  வியாபாரம்  பழையபடிக்கி   ஒரே  மாதிரி  தான்  போய்க்  கொண்டிருந்தது.. குலுக்கல்  போட்டி யிலும்  பணம் இரட்டிப்பாகவில்லை.  போட்டது  தான்  வந் தது. . அவருக்கு  பெரிய வர்  மேல்  ஆத்திரமாக வந்தது.

யோவ்.. ன்னாய்யா....ஜோஸியம்  சொல்றீங்கநீர்  அளந்த  மாதிரி  ஒரு  மண்ணும்  நடக்கலே! எல்லாம்  எப்ப வும்  போலத் தான்...நீரெல்லாம்  பெரிய  வாக்கு  சொல்ற வரா??  !..”

 பெரியவர்  அமைதியாக  பதில் சொன்னார்.

 அய்யா..  உண்மையில்  நான்  அப்படி நினைத்துக் கொள்ள வில்லை…நீங்கள்  கேட்கும் போது  எனக்குத்  தோன்றி யதை   தான்  ஏதோ   சொல்லிவருகிறேன்.. உங்கள்  கோபம்  சரி தான்..” 

இப்போதும்  ஏதோ  எனக்குத் தோன்றுகிறது.   சொல் லிவிடுகிறேன்.   உங்களுடைய  அடுத்ஆறு  மாதத்துப்  பலன் இது  .. நான்  சொல்லியபடி  நடக்கிறதா  என்று நானும்  பார்க்கப் போகிறேன் ..என்றார்  அந்தப் பெரியவர்.

 கந்தசாமி  அவர்  சொல்லுவதைக்  கேட்டார்.   அவர்  சொன் னதைக்  கேட்டு  பலமாக  சிரித்து விட்டார்..  அவர்  வாக்குத்  தான்   பலிப்பதில்லையே!...  என்று  அவருக்கு  நம்பிக்கை.

ஆனால்  அடுத்த  மாதம்   அவருடைய  சரக்கு  லாரி மரத்தில்  மோதி  அத்தனையும்  பாழாகிவிட்டது.  அதற்கு  அடுத்த  மாதம்  அவர்   மனைவிக்கு   பெரிய  வியாதி  வந்து  அந்த சிகிச்சை  ஆரம்பமாகியது.

அதற்கு  அடுத்த  மாதம்  வீட்டுப் பின்னறையில்  மின்கசிவு  ஏற்பட்டு  பாதி  வீடு  எரிந்து போய் விட்டது. கந்தசாமிக்கு  துக்கமும் ஆத்திரமும்     வேதனையும்  சொல்லி  முடியாமலி ருந்தது. எப்படி அந்தப்  பெரியவர்  சொன்னபடியே  எல் லாம்  நடந்தது!!

ஆனாலும்  அவரால்  பெரியவரைக்  குற்றம்  சொல்ல  முடிய வில்லை  போன முறை  பெரிய வரை  மரியாதையில்லாமல் பேசிவிட்டது  தவறோஅதனால்தான்  இப்படியோ?  அவரி டம்  மன்னிப்புக்  கேட்க  வேண்டுமோ? ‘ கந்தசாமி   குழப்பத் துடன்  யோசித்துக்  கொண்டிருந்தார்.

அப்போது  அந்தப்  பெரியவரே   அங்கே  வந்தார்.

“”கந்தசாமி, .உங்களுக்கு  நேர்ந்த  கஷ்டங்களையெல்லாம்  கேள்விப்பட்டேன்  மிகவும்  வருத்தமாக  இருந்தது    நேரில்  வந்து  என்  அனுதாபத்தைத் தெரிவித்துப்  போகலா மென்று  வந்தேன் “  என்றார்.

கந்தசாமி கலக்கத்துடன்  சொன்னார்: உங்கள்  வாக்கு உண் மையானது  தான்...ஸாமீ...   . என்னை  மன்னிச்சுடுங்கோ! என்றார்.

கந்தசாமி... மன்னிப்பெல்லாம்  பெரிய  வார்த்தை... நான்  எனக்குத் தோன்றியதைத் தான்  சொன்னேன்.... இந்த முறை  அது  பலித்திருக்கக்  கூடாது.. ஆனால் பலித்து விட் டது. எனக்கு  வருத்தமாக  இருக்கிறது.  இந்தாருங்கள் போன  தடவை  நீங்கள்  எனக்குக்  கொடுத்த  தொகை..   இப்போது  அது  உங்களூக்கு  மிக்க உதவியாக  இருக்கும்.

கந்தசாமியால் அதைத்  தட்ட  முடியவில்லை.. வாங் கிக் கொண் டார்.

போக  நினைத்த  பெரியவர்  மீண்டும்  திரும்பி  வந்து  ஒரு  காகிதத்தில் ஏதோ  எழுதிக்  கந்தசாமியிடம்  கொடுத்தார்.

என்ன..ஸாமி  இது ?”

இப்போது  எனக்குத் தோன்றியது.

அவர்  போய்விட்டார்.  கந்தசாமி  காகிதத்தைப் பிரித்துப்  படித்தார்.

“சம்பவங்கள்  எப்படி  நடக்கவேண்டுமோ  அப்படித்தான்  நடக்கும்.  இது  உங்களுக்கே   தோன்ற  வேண்டும்.  நான்  சொல்லித்  தோன்ற வேண்டியதில்லை.  

                  


இந்து  தமிழ் நாளிதழ்  30/4/15



                           
   





Monday, April 6, 2015

BUTTERFLY!

BUTTERFLY!

Vaidheeswaran



This morning the  garden was full of  butterflies.


Perhaps after the drizzle followed by warm sunshine the  air  is  cozy and pleasant  for the butterflies to enjoy fluttering their wings and float around the sky aimlessly that  gives them  immense joy. 


They flew high and low  in  beautiful pattern some times as low as to touch the  short plants with flowers near  the  ground.


My grand_daughter who  was  playing around there was so intrigued to  watch  them  flying and  went  running hither and thither  to  catch  them in the  air; or at least  touch one of them.   


She almost caught one of them when I hastened  and  said   “Don’t  don’t…” .


“Why thathaa…?” she  retorted.


“Why do you want to catch  them?”  I  said.


“I don’t  know why….  I  like  it…”


“Can  you  tell  me  why?” 


“When  I  see  them  flying   I  feel  like  catching  them it is like plucking  the    flower in  the  air…. … ha ha…!”


“But   do  you   know  it  is  like  pricking   their   legs  for  them. It may  hurt. Why  do  you  want  to  catch  them ?”


“Maybe… I don’t know…I am jealous of  them  flyi ng free  in   the air .. which I  would not be  able to  do .”


“Oh yes, you may be right, child… but there  are  so  many things around you  about  which you  may  be jealous because you  cannot  be like  them!!.. can  it  be  the  rea son  for  you  to  hurt them?”


She   kept  nibbling  at  her  fingers for  some time to  think  of  an  answer.


No thatha  may  be  you  are   right in what you  say…but, there  is  a  joy in catching  the  butterfly… it is fun  thaathaa…every time I try they will fly out of my hands and escape being hurt. it is a   game  we  are playing  I suppose…………..!!


“Well…as  long  as  you  keep  losing  the  game.. you  are  right… hah…  …”

And I moved away…thinking…..’perhaps… they too enjoy this game!!……who knows?....”



***imaginary talk  with  my  grand-daughter