vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Sunday, August 9, 2015

உத்தரவாதம்
                                                                           வைதீஸ்வரன்










அப்பாவின்  அந்திமக் கிரியைகளை   முடித்துவிட்டு  வீடு திரும்பிஆயாசமாக  கூடத்தில்  உட்கார்ந்துகொண்டிருந்
தான் சங்கரன்.

அப்பாவின் நீண்டகால ராணுவ சேவை...பிறகு ஓய்வு, தள்ளாமை நோய்.... மரணம்...ஒவ்வொன்றாக அவன் நினை
வில் ஊர்ந்து போய்க்கொண்டிருந்தது.

அண்ணாந்துபார்த்தான் மேலே பரணில் அப்பாவின் பழைய 
பெட்டிஒன்று கண்ணுக்குப் பட்டது. அதை அவன்  இத்தனை 
வருஷங்களாகத்திறந்து பார்த்ததே  இல்லை. அப்பா வும் ஓய்வு
க்குப் பிறகு அந்தப்பெட்டியைப் பற்றி அக்கறை காட்டவே 
இல்லை.

ஏணிவைத்து ஏறிபெட்டியைக் கீழே இறக்கித் திறந்து பார்த்
தான். ஏற்கனவே  அதன் பழைய பூட்டுஉடைந்துதான் இருந்
தான்.

உள்ளே அப்பா கடைசியாஅணிந்துகொண்டுபோன ராணுவ
உடைஒன்று   பூச்சிமணத்தோடு கசங்கிப்போய் நவுப்பாக மடி
ந்துகிடந்தது. 

அப்பாவை ஒரு  காலத்தில் அந்த உடையில் கம்பீரமாக பார்த்த 
ஞாபகம் சங்க ரனை  சற்று நெகிழச்செய்தது.

உடையை நன்றாகவெயிலில் உலர்த்தி உதறி  புழுதிகளை நீக்கி  
சீராக்கினான். அதைப் பார்க்கும்போது அப்பாவின்  கடந்த கால 
ஸ்பரிஸமும் வாசனையும்  நினைவில் சுழன்று  மனதை ஈரப்படு
த்தியது. அப்பாவின் ராணுவஉடையைத் தானும் அணிந்து
கொண்டு பார்க்க வேண்டுமென்று அவனுக்கு ஒருஆவல்.

அவர் இவனைவிட பருமனாக இருப்பார். போட்டுக்கொண்ட
போதுஉடை  பெரியதாக தொளதொளவென்று இருந்தது.
கண்ணாடியில்  பார்த்துக்கொண்டு சற்று நேரம் நின்றான்.  
சிரிப்பு வந்தது.இரண்டுபக்கமும் நீண்ட  ஆழமான பாக்கெட்
டுகள்இருந்தன.... கையை  விட்டுப் பார்த்தான்.

இதென்ன?"வலது பாக்கெட்டில் ஏதோ ஒரு காகிதம் 
தட்டுப்பட்டது. பிரித்துப் பார்த்தான்.

ரங்கராஜூ  ஷூ கடை
ரிப்பேருக்கு  ஒரு  ஜதை  ஷோ
மிலிட்டரி கோபால்
தேதி  8-9- 90”  கூலி  ரூ25/

இதென்னஅப்பா இருபத்திஐந்து வருஷங்களுக்கு முன் ரிப்
பேருக்காக இந்தக்கடையில் கொடுத்தகாலணியை வாங்கவே       மறந்துபோயிருக்கிறார். கடைசியாக   சில வருஷங்களில் 
அவருக்குமெள்ள மெள்ள ஞாபக மறதி அதிகமாகிக்கொண்
டிருந்தது.

ஓய்வுக்குப்பின் உபயோகமற்றுப்போன காலணியைப் பற்றி  
நினைக்கவேஅவருக்கு விருப்பமில்லாமல் போய்விட்டதோ!!

25  வருஷங்கள்....இப்போது அந்தக் கடை இருக்கிறதாஅந்த 
சொந்தக்காரன்   இன்னும் இருப்பானா?அவனுக்கு ஞாபகமி
ருக்குமாஅந்தத்தெருவே இப்போது அதே மாதிரி இருக்குமா?

விலாஸத்தைப் பார்த்தான் :

ரங்கராஜூ  ஷூ  கடை
நம்பர்  14  ராகவ ரெட்டி  தெரு...

நல்லவேளைவிலாஸம் தெரிந்ததாகத்தான் இருந்தது

ஆனால் தெரு பெயர் தான் இப் போது ராகவாத் தெரு 
என்றுமாறிப் போயிருந்தது.

ஆவலை அடக்கிக்கொண்டுமறுநாள் காலைவரை காத்திருந்து  
சங்கரன் ரங்கராஜு ஷூ கடையைத்தேடிக்கொண்டு போனான்.

இப்போது நிச்சயமாக ராகவாத் தெரு பழைய ராகவ ரெட்டி
தெருவைப் போல்  இருக்காது. ஏகப்பட்ட கடைகள் .இடித்துக் 
கட்டப்பட்ட அடுக்ககங்கள்... வாகனக்  கூச்சல்கள்...

இருந்தாலும் ஏன்அந்தப் பழைய ஷூ கடைஅங்கே இன்னும் 
இருக்கக்கூடாது?

இரண்டுமூன்று
 முறை மேலும் கீழுமாக நடந்துநம்பர் 14 கண்
ணில் படுமா என்று   பார்த்துக்கொண்டு போனான். 

நம்பர்கூட மாறி இருக்கலாம். பெயர் பலகை இருக்கலாமே!!

சட்டென்று  ஒரு இடத்தில் நின்றான். அங்கே வலதுபக்கம் 
ஒரு சைக்கிள் கடை யின் தகரக் கூரைக்குப் பின் தெரிந்த மேல்
மாடி யில் அநேகமாக  பிளந்து கொண்ட ஒரு அறைக்கதவில் 
அந்தப்பலகை கோணலாகத் தொங்கிக் கொண் டிருந்தது !!

ரங்கராஜூ  ஷூ கடை!!

சங்கரனுக்கு வியப்புத் தாங்கவில்லை. சைக்கிள்கடையின் 
பக்கவாட்டில் மெல்ல  றிப்போய் மேலே கடைக்குள் எட்
டிப்பார்த்தான்

சிறிய நீள வாட்டமான அறை. சுவர் ஓரங்களில்பொருந்தி
யிருந்தநீளமான பலகைகளில்  பலவிதமானகாலணிகள்
அலங்கோலமாகநிரம்பிக்கிடந்தன.  அதிக வெளிச்சமில்லை. 
பழைய தோல் வாசனை குப்பென்று நெடியடித்தது.

யாரு  ஸார்?”   

வயதான கிழவன் ஒருவன் கண்ணாடியை மூக்கில் பொருத்
திக் கொண்டு இருண்டபின்கட்டிலிருந்துமெள்ள வெளியே 
வந்தான். அங்கேதான் அவன்  குடித்தனமும்  இருக்க வேண்டும் என்று தோன் றியது.

 சங்கரன்  தயக்கத்துடன்  ஆரம்பித்தான்.

நல்லவேளை  ஒங்ககடையை  கண்டு பிடிச்சுட்டேன்...ரொம்ப 
வரு ஷமா இந்த  கடை  இருக்குதோ?" ஒரு  பேச்சுக்காக சொன்
னான்.

 கிழவனுக்கு  அது ரஸிக்கவில்லை.

தம்பீ...இப்போ  என்னா  வோணும்  உங்களுக்கு?  ஒங்க  
செருப்புநல்லாத்  தானே  தெரியுது!..

இல்லேஅதுக்காக வரலே!.. இது இப்போ இருக்குமோ
இருக்  காதோ...தெரியலேய்யா.. இந்த சீட்டைப் பாருங்க..
எங்கஅப்பா  மிலிட்டரிக்காரர்...இருபத்தி அஞ்சு வருஷத்து
க்குமுன்னாடி இங்கே  ஷூ  ரிப்பேருக்கு  கொடுத்தார்திருப்பி 
வாங்கமறந்துபோய்ட்டாருன்னு நெனைக்கிறேன்.இந்தச் சீட்
டைப்பாருங்க!  அநேகமா  இருக்காது.  சும்மா ஒரு  ஆர்வத்துக்
காகத்தான்  அப்பா ஞாபகமா....வந்தேன்".

சங்கரன் அந்த ரஸீதை கிழவனிடம் கொடுத்தான்.

கிழவன்  தடிமனான கண்ணாடியை சரி செய்து  கொண்டு 
சற்று நேரம் ன்னிப்பாக ரசீதைப் பார்த்துக்கொண்டே
நெற்றியை  தேய்த்துக்கொண்டான்...கொஞ்சம் இருமி
னான்.

 “இருங்க..பாக்கறேன்..”   .

மெதுவாகஅண்ணாந்து சுவரோரம் இருட்டு மூலையில் 
சாய்ந்து நின்றுகொண்டிருந்த ஒரு பரணின்  மேல்   தட்டில்சுமத்திவைக்கப்பட்டிருந்த பழைய செருப்புக் கூட்ட
ங்களுக்குள் ஒரு கம்பை நீட்டி ஆட்டினான். நாலைந்து செருப்பு கள் தபதபவென்று தரையில் விழுந்தன. 

கிழவன் அவற்றையெல்லாம் எடுத்து உன்னிப்பாகப் பார்த்து
விட்டுக்  கீழே  போட்டான். மீண்டும் பரணின் இன்னொரு 
மூலையிலிருந்து செருப்புகளை   உதிர்த்தான்.
  
சங்கரனுக்கு  பெரிய  எதிர்பார்ப்பில்லை.

"முடியலேன்னா  விட்டுடுங்க..” ......

கிழவன் கழுத்தைத்திருப்பி சங்கரனைகூர்மையாகப் பார்த்து
விட்டுஒங்க  அப்பா ஞாபகார்த்தமா கேக்கறீங்க.இருங்க,
பொறுமையா  பாத்து        தரேன்...மறுபடியும்  கும்பலில் 
தேடஆரம்பித்தான்.... 

கையில் ஏதோஒரு  ஜதையைஎடுத்து சோதித்துப்  பார்த்து 
விட்டு மறுபடியும் ஏதோ நினைவுக்கு  வந்த  மாதிரி மேலே  
பார்த்தான்...

  “இருக்குங்க...

  “என்னது?..இருக்கா?..” சங்கரனால்  நம்பமுடியவில்லை!

 “அதோ பாருங்க அந்த  மேல் தட்டு மூலையில….அந்தக்  
கருப்புஜோட்டுக்   குப் பின்னாலெ நாடா இல்லாமெ ரெண்டு  
ஷூ  தெரி யுதா.தல தடிமனான    முரட்டு   ஷூ.....

  சங்கரனால் இன்னும்   நம்ப முடியவில்லை.

 ஆமாம் தெரியுதே!..

 “அது தான்  ஒங்க  அப்பாவோட  ஷூ...

சங்கரனுக்கு  நம்ப முடியாமல்  ஆச்சரியமாக இருந்தது..
அந்தக்  கிழவனை   பெருமிதத்துடன் பார்த்தான். 'இந்த  
வயதில் இவருக்குஎவ்வளவு ஞாபகம்! எவ்வளவு நாணயம்! 
எவ்வளவுசிரத்தை...! அடடா!........'

ரொம்ப  நன்றிங்க....எப்படி  இருபத்தி ஐஞ்சு வருஷமா 
இவ்வளவு பத்திரமா  இதை  வைச்சிருக்கீங்க...ஆச்சரியமா 
இருக்குங்க...! அப்பா இருந்தா  இப்போ எவ்வளவு சந்தோ ஷப்படுவாரு..

அதெல்லாம் ஒரு தொழில் விசுவாசம்தான் தம்பி... இங்கே  
ரிப்பேருக்குக்  கொடுத்தா எதுவும்  இங்கெயே தான்  இருக்
கும்..போகாது.!!..

அவன் ஷூவை காகிதத்தில் பொதிந்து கட்டிக்கொடுப்பான் என்று சங்கரன் காத்துக்கொண்டிருந்தான்.

சங்கரன் நிற்பதைப் பார்த்து கிழவன் உத்தரவாதத்துடன் சொன்
னான்.

தம்பீ....பிரச்னையில்லே!..அடுத்தசெவ்வாக்கிழமை இதே 
டயத்து க்கு வாங்க .......... ரெடியாயிடும் !!!!!!!

சங்கரனுக்கு கீழே இறங்கப் படி தேவை இருக்கவில்லை!



Saturday, August 1, 2015

சித்திரப் பூ மலர்ச்சி.

சித்திரப்  பூ மலர்ச்சி.


வைதீஸ்வரன்

கலையும்   உறக்கமும்  எங்கிருந்து  வருகின்றது?..   எப்போது   ஏன்  வருகின்றது?   இது  என்னை   வியப்பிலாழ்த்தும்  புதிர்கள்.

இந்த  ஓவியத்தை  இப்போது  வரைந்த  போது  நான்  ஓவியங்கள்  வரையாமல்  இருந்த  வருடங்கள்  ஏழெட்டு  இருக்கலாம்.  எனக்கு  மறந்துபோய்விட்டது. ஒரு  சூழ்நிலை  விபத்தால் இந்த  படத்தை  வரைந்தேன்.   நண்பர்கள்   இதைப்  பாராட்டியபோது  இது  எனக்கு  சேர்ந்ததா....அல்லது  எனக்குள் ஒளிந்துகொண்டிருக்கும்  இன்னொ ருவனுக்கு  சேர்ந்ததா.. என்று  சற்று  தடுமாற்றம் நேர்கிறது.

முதலில்  என்  பேத்திக்கு  நன்றி  சொல்ல வேண்டும்.  அவள்  வரைய வேண்டும்  என்று  பிடிவாதம்   பிடித்து  அவளுக்கு  வண்ணப் பெட்டி யும் தூரிகையும்  வாங்கிக்கொடுத்தார்கள்  அவள்  ஆசையுடன்  அதை  வைத்துக்  கிறுக்கிக்கொண்டிருந்தாள். அவள் கிறுக்கி அலுத்துப்போய்  தூங்கப்போன வேளைகளில் நானும்  ஏதாவது  வரையலாமே  என்று  தோன்றியது..

வரைய வரைய அந்த அனுபவம் ஒரு சிலிர்ப்பாகி  மூடி வைத்த ஜன்ன லைப் பிளந்துகொண்டு காற்றுப் பாய்ந்த மாதிரி ஒரு தொலைந்து போன  நதியை மீண்டும்  கண்டறிந்துகொண்ட மாதிரி  ஒரு   மகிழ் ச்சி.....ஒரு  மீட்சி...

நம்மைத்  தானாகத் தேடி  வந்து  நம்  மூலமாக  வெளிப்படும்  கலை அனுபவத்தின்  தருணங்கள்   ஒரு  கொடை. இது  ஒவ்வொரு  கலைஞ னுக்கும்   நேருகின்ற  ஆழ் மன  மலர்ச்சிதான்..

  இது  தான்  நமக்கு   ஒப்புயர்வற்ற  பரிசு.  



Ø       


Sunday, June 28, 2015

என் அம்மாவின் காப்பிப் பாட்டு

         
                என்  அம்மாவின்  காப்பிப்  பாட்டு  

வைதீஸ்வரன்
------------



இந்த    “காப்பி ”  குடிக்கும் வழக்கம்  நமக்கு  எப்போது  தொத்திக்  கொண்டது?   இந்த  வழக்கத்தை   நம்  கலாசாரத்தோடு  கலந்து  கரைத்தது   வெள்ளைக் காரர்கள்தான்  என்று  தெரிகிறது.   எனக்குத் தெரிந்தவரை  1920க்கு  மேல்  தான்  பிராமணக் குடும்பங்களின்  சமையலறைக் குள்   இந்தக்  காப்பி பானம்  சகஜமாக  புகுந்திருக்கலாம்.

1916ல்  கல்யாணம்  செய்து  கொண்டு புகுந்த  வீட்டுக்கு  வந்தபோது  குடும்பத் தில்   புருஷர்கள்  மட்டும்  தான்  காப்பி   குடிக்க  அனுமதிக்கப் படுவார்கள்  என்று  என்  தாயார்  சொல்லக்  கேட்டிருக்கிறேன் .

பிறகு  இந்த  பானத்தின்  ஆதிக்கம்  மெள்ள  மெள்ள   பொதுவான  காலைப்  பழக்கமாக  மாறி  பிராமணக் குடும்பத்தைத்  தாண்டி  சமூகத்தின்  பிற  ஜாதி  வட்டங்களிலும்   இன்றியமையாத  பானமாக நிலைத்து  விட்டது.
..
1920க்கு முன்பு .. காப்பி குடிப்பது  ஆசாரத்துக்கு அவ்வளவு பொருத்தமான விஷயமாக   ஒப்புக்கொள்ளப் படவில்லை. மேலும் அது வெள்ளைக்காரனின்   நாகரீகம் என்ற அன்னியத்வேஷமும்   நிலவி வந்திருக்கக்  கூடும்.. ..

ஐம்பதுகளில்  வெளிவந்த  ஒரு  சினிமாவில்  கூட   என்.எஸ்.கிருஷ்ணன்  பகட்டான  வாழ்க்கையை  கேலி  செய்து  பாடுகிற பாட்டில்  “ அவ  கார்லெ  போவா.... ஊரைச்  சுத்துவா...கண்ணாடி  பாப்பா...காபீ  குடிப்பா.....”  என்று  இளக்காரமாக  பாடுவார். கஞ்சி  குடிப்பது  தான் நமது கலாச்சாரப் பண்பு...என்று  சொல்லுவார்.

ஆனால் சூடான காப்பியின்  விறுவிறுப்பு  உள்ளே போனபோது அது இந்த   சம்பிரதாய தயக்கங்களை மீறிக்கொண்டு நாக்கையும் மனதையும்   வளைத் துப் போட்டு விட்டது. முக்கியமாக சங்கீதக்காரர்களும்  கலைஞர்களும்  இதை சோமபானமாகவே’’ பாவிக்கத் தொடங்கிவிட்டார்கள் ..கர்நாடக சங்கீதத்துக்கும்  காப்பிக்கும்  ஏதோ ஒரு அபாரமான  பொருத்தம்..  மெள்ள மெள்ள காப்பியின் இந்த ஆக்ரமிப்பு  இந்தியக்  குடும்பங்களில் இன்றிய மையாத  ஒரு கலாசார அடையாளமாகவே  மாறிவிட்டது.

 ஒரு சுமுகமான வரவேற்புக்கு  காப்பி ஒரு அவசியமான ஆரம்பமாக ஆகி  விட்டது...

வீடு  தேடிப்  போன  போது  ஒரு  வாய்க்  காப்பி  கூடவா  கொடுக் கலே... அந்தக்  கடங்காரி..”  என்ற  வசனத்தை  நாம்  கேட்டிருக்கிறோம்.

இந்த காப்பி பானத்தின் அன்னியத்தன்மையை பின்னுக்குத்  தள்ளி  நம் கலாசாரத்தோடு சகஜமாக  ஒட்டவைக்கும் முயற்சி அந்தக்  காலத்தில்  பரவலாக  இருந்திருக்கும்போல்  தெரிகிறது..

அதற்கு  ஆதரவாக  அந்தக் காலத்தில்  யாரோ ஒருகாப்பி வெறித் தாத்தாஒரு பாட்டு எழுதி  எல்லோரையும்  பாடச்  சொல்லி  சமூகத்தின்  உளவி யலை பாதித் திருக்கிறார்..

 கீழ்க்காணும்காப்பி  பாட்டை “  என்  அம்மா தான்  சிறு வயதில் கேட்ட  பாட்டை  தன்  90  வயதில் எனக்கு  பாடிக்காட்டினாள்அதை  உடனே  எழுதிக்கொண்டேன். “அந்தக் காலத்துலே  எல்லாரும் பாடுவா. கல்யாணத் துலே  கூட  பாடுவா... கேலியும்  சிரிப்புமா  இருக்கும்..  ஆனா  வார்த்தை  கொஞ்சம்  விட்டுப் போயிடுத்து...”  என்றாள்..
  

                   *****

       காப்பீ குடிக்க வேணும் ஜனங்களெல்லாம்
       க்ருஷ்ணனை ஸ்மரிக்க வேணும் ஜனங்களெல்லாம்
       காசு பணம் செலவில்லை ஜனங்களுக்கு
       கடன் காரன் தொல்லையில்லை ஜனங்களுக்கு

       *க்ளப்புக்கு போகவேண்டாம் ஜனங்களெல்லாம்
காபி  வீட்டில்  அனுமதியில்லை...க்ளப்புக்குப்  போக வேண்டியிருந்தது ..என்கிற   சூழ்நிலை  தெரிகிறது..}

       ஜப்திவாரண்டு இல்லை இல்லை ஜனங்களுக்கு

     [அடுத்த சில வரிகள் தெளிவாக இல்லை }
  [விருத்தம் ]

        உத்தரத்து  உரியிலேருந்து  பாலெடுத்து
        ஆசையெனும் பாத்திரத்தில் பொடியைக்கொட்டி
        பாசமுள்ள வஸ்திரத்தில் வடியக் கட்டி
        நேசமுடன் சூடு பண்ணிய  திக்குக்   காப்பி
        திக்குத்  திக்கான  காபி.....]
              **

       தருமர் சாப்பிட்ட தரமான காப்பி
       அர்ஜுனன் சாப்பிட்ட அசலான காப்பி
       பீமன் சாப்பிட்ட பேஷான காப்பி
       நகுலன் சாப்பிட்ட சூடான காப்பீ
      சகதேவன் சாப்பிட்ட ஸ்ட்ராங்கான காப்பீ

       எல்லாரும் சாப்பிடுங்கோ..
       தேவாளும்  தேடி வருவா!!!

                 
             ******

       [வேதாந்தப் பாட்டு   எஸ். வி கிருஷ்ணம்மாள்]