vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Sunday, January 22, 2017

கவிதைக்கு மொழி ஒரு விசைப்பலகை தான் -

கவிதைக்கு  மொழி  ஒரு  விசைப்பலகை தான்
------------------------------------------------------------------------------


நான்  இவர்  கவிதைகளை  ஆங்கில மொழி பெயர்ப்பில்  தான்  கண்டேன்.
இவர்  பெயர்  
என். கோபி.  
தெலுங்குக்  கவிஞர்.  
அடிக்கடி வாசிக்கத்  தூண்டும்  வரிகளாக  தோன்றுகின்றன.

தமிழ் மொழிபெயர்ப்பு :      வைதீஸ்வரன்




தாயாரின் முந்தானைக்குள்  பதுங்குவது போல்
துன்பங்களின் போது
நான் கவிதைக்குள்  புதைந்து  போகிறேன்.


          ***********


அவள்  மரணம் 
நொடியில்  நிகழ்ந்தது.
மரணம்  இந்த   நொடியில்
எங்கும்  நிகழுகிறது


          ***********


காலண்டரை   தின்று  கொழித்த
காலத்துக்கு
இயக்கம்  மட்டும்  தான்  உண்டு
இலக்குகள்  இல்லை!


        **************


வியர்வை  எறும்புகள்
எத்தனை  தட்டினாலும்
விலகுவதில்லை.


   *****************
அதோ  அந்தப் பையன்
மீண்டும்  நம் குழந்தைப்  பருவத்துக்குள்
பந்தை  எறிகிறான்.


    *********    

.

No comments:

Post a Comment